இதயம் உன்னை தேடுதே
உன்னை எண்ணி பார்க்கையில
உள்ளம் கலங்குமடி
ஊரின் வாசம் தேடையில
உன் நினைவு துரத்துமடி
சின்ன வயதில் நீ இருந்து
சீண்டிய நினைவு பொழியுமடி
அச்சம் இல்லா நீ பொழிந்த
அன்பை தேடுமடி
எதையும் அறியா எனை ஏற்ற
எண்ணம் பிடிக்குதடி – அதை
எண்ணி எண்ணி பார்க்கையில
என் மனம் வியக்குதடி
கள்ளம் இல்லா பேச்சழகும்
கனிந்த மொழி பண்பழகும்
இன்றும் நினைவில் இனிக்குதடி
இதயம் உன்னை தேடுதடி
தரிசா தரை கிடந்தாலும்
தாமரை குளம் போதுமடி
வருடம் பல ஆனாலும்
வளமாய் வயல் செழிக்குமடி
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 30-11-2023
எமது வைபர் குழுவில் VIDEO காட்சிகள் பார்க்க விரும்புவார்கள் இணைக
- அகதிகளாக ஓடிய இஸ்ரேலியர்கள்
- பலஸ்தீனத்திற்கு ஆதரவாக கொழும்பில் போராட்டம்
- யாழில் வெடிமருந்துகள் மீட்பு
- ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
- பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு
- முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க தடை
- யாழ் சிறைச்சாலை பேருந்து விபத்து
- இஸ்ரேல் படையினர் காயம்
- போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
- விடுதலை வேண்டும் சிறீதரன் எம்பி