யாழ்ப்பாணம் சிறைச்சாலை கூரை மீதேறி உண்ணாவிரதமிருந்த கைதி

யாழ்ப்பாணம் சிறைச்சாலை கூரை மீதேறி உண்ணாவிரதமிருந்த கை
Spread the love

யாழ்ப்பாணம் சிறைச்சாலை கூரை மீதேறி உண்ணாவிரதமிருந்த கைதி

யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் கூரையின் மேலேறி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சிறைக்கைதி ஞாயிற்றுக்கிழமை (28) மதியம் சிறைச்சாலை அதிகாரிகளினால் கீழே இறக்கப்பட்டுள்ளார்.

அவ்வாறு இறக்கப்பட்ட கைதி சிறைச்சாலையின் வைத்தியசாலையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலை கூரை மீதேறி உண்ணாவிரதமிருந்த கைதி

குற்றசெயல்களில் ஈடுபட்ட கைதாகி குருவிட்ட சிறைச்சாலையில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்தார். அதன்பின்னர், யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு அவர், மாற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து தன்னை வேறு சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கோரி சனிக்கிழமை (17) மாலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் இன்று (28) மதியம் கீழே இறக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதில் மாத்தறையைச் சேர்ந்த புஷ்பகுமார (வயது 41) என்பவரே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு கீழே இறக்கப்பட்டார். அத்துடன் அவருடைய போராட்டமும் முடிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.