மழையில் மதில் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி
அலவத்துகொட, தொடங்கொல்ல பகுதியில் நேற்று (08) இரவு பெய்த அடை மழையில் வீடொன்றின் மதில் சுவர் இடிந்து வீழ்ந்துள்ளது.
உயரமான பகுதியில் அமைந்துள்ள வீட்டின் முற்றத்தில் மண்சரிவு ஏற்பட்டதில், 15 அடி உயர மதில் சுவர் வீட்டின் கீழே உள்ள வீதியில் உடைந்து விழுந்ததில், அப்போது வீதியில் நடந்து சென்ற ஒருவர் மீது விழுந்துள்ளது.
உடனடியாக செயற்பட்ட பொலிஸார் பிரதேசவாசிகளுடன் இணைந்து விபத்தில் சிக்கியவரை அக்குரண வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் அக்குரண, குருந்துகஹால பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முள்ளிவாய்க்காலில் நடந்த பெரும் அதிர்ச்சி
- நந்திக்கடலில் ரவிகரன் அஞ்சலி
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு
- அரச துறையில் ஊழல் மோசடி
- மழையுடனான வானிலை வௌ்ள அபாயம்
- மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள்
- பொது வேட்பாளரை ஆராய்கிறோம் டெலோ
- ரஷ்ய போரில் பங்கெடுத்திருக்கும் இலங்கையர்கள்
- யாழில் கொலை செய்யப்பட்ட பெண்
- ஆயிரம்போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
- பாடசாலை மாணவர்களின் வருகை அதிகரிப்பு
- இலங்கை போர்க்குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கு தொழிற்கட்சி உறுதி