பஸ்ஸில் பாலியல் சில்மிஷம்: 24 வயது இளைஞன் கைது
களுத்துறையில் இருந்து அளுத்கம பகுதிக்கு, பொதுப் போக்குவரத்து
பஸ்ஸில் பயணம் செய்த, அரச நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் 49 வயதுடைய
பெண் ஒருவரிடம், பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட இளைஞனை, அளுத்கம பொலிஸார் இன்று (30) கைதுசெய்துள்ளனர்.
பஸ்லில் பயணம் செய்யவாறே, பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் நிலையத்துக்கு
அறிவித்துள்ளார். இதனையடுத்து, அளுத்கம பொலிஸார் பஸ்ஸை இடைநிறுத்தி,
பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட 24 வயதுடைய இளைஞனை கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர், கித்துல்கல பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன்,
சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் அவர் பணியாற்றி வருவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.