இலங்கை ,நீர்கொழும்பு ;கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 33 பேர் கடல்படையால் கைது
இலங்கை நீர்கொழும்பு பகுதியில் இருந்து ரெலோர் மீன்பிடி படகு மூலம் வெளிநாடு சென்று கொண்டிருந்த படகு ஒன்றை இலங்கை கடற்படையினர் சுற்றிவளைத்தனர் .
இதன் பொழுது அந்த படகில் இருந்த 33 பேர் கைது செய்யப்பட்டனர் .
இவ்வாறு கைதானவர்களில் ஐந்து பெண்கள் ஒன்பது சிறுவர்கள் 19 ஆண்கள் உள்ளடங்களாக 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
கைதான அனைவரும் காவல்துறை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் பாரபடுத்த படவுள்ளனர்.
இலங்கையர் 15 பேரை நாடு கடத்திய அவுஸ்ரேலியா
கடல்வழியாக வெளிநாடு செல்ல முற்பட்ட 30 பேர் கைது
இலங்கையில் இருந்து கடல்வழியாக அவுஸ்ரேலியா நோக்கி தமிழர்கள் பயணித்த வண்ணம் உள்ளனர்.
அவுஸ்ரேலியாவுக்குள் கடல்வழியாக நுழையும் மக்களை அங்கிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பி வருகின்றது.
அவ்வாறு இருந்தும் தொடராக இலங்கைக்கு அகதிகள் இவ்விதமான ஆபத்தான கடல்வழியூடாக பயணித்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.