ATM இல் கொள்ளை மூவர் கைது
மதுரங்குளிய, 10 ஆம் கட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றின் ATM இயந்திரத்தில் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி சந்தேகநபர்கள் ATM இயந்திரத்தில் இருந்த 10 லட்சத்து 54 ஆயிரத்து 490 ரூபா பணத்தை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கமைய மதுரங்குளிய பொலிஸார் மற்றும் புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அதன்படி நேற்று (17) காலை அனுராதபுரம் பொலிஸ் பிரிவில், புத்தளம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சந்தேக நபர்களை கைது செய்ததுடன், சந்தேகநபர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்களிடம் இருந்து திருடப்பட்ட 9 லட்சத்து 277 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ATM இல் கொள்ளை மூவர் கைது
கல்கமுவ, வரெல்லாகம மற்றும் அனுராதபுரத்தைச் சேர்ந்த 28, 32 மற்றும் 35 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய ஆடைகள், தலைக்கவசம் மற்றும் பாதுகாப்பு கேமராவுக்கு தெளிக்கும் ஸ்பிரே ஆகியவற்றைக் கண்டுபிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மதுரங்குளிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்
- இலங்கை போர்க்குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கு தொழிற்கட்சி உறுதி
- கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு ஜூலையில்
- பட்டப்பகலில் கடத்தப்பட்ட மாணவி
- சஜித்அநுர விவாதத்திற்காக பொது விடுமுறை
- விஜயதாசவுக்கு எதிரான தடை உத்தரவு
- இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க அரசுஅவதானம்
- பிரான்ஸ் வீதியில் உணவின்றி தவிக்கும் தமிழ் முதியவர்
- முள்ளிவாய்க்கால் நினைவுதினம் பிரிட்டன் பாராளுமன்றில்
- தனி ஈழம் வெற்றி பெறும்
- கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு