Search Results for: வவுனியாவில்
வவுனியாவில் பொலிசாரை மோதி தள்ளிய வண்டி
வவுனியாவில் பொலிசாரை மோதி தள்ளிய வண்டி
வவுனியாவில் பொலிசாரை மோதி தள்ளிய வண்டி செயல்பாடு மிக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
மோட்டார் சைக்கிளில்
மோட்டார் சைக்கிளில் இரு போலீசாரை வீதி போக்குவரத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் .
அப்பொழுது சிறிய ரக லொறி ஒன்று அந்த இரு காவல்துறையினரை வண்டியால் மோதி தள்ளியது .
இதன் பொழுது அவர்களது மோட்டார் சைக்கிள் சேதமானது ,மேலும் அவர்கள் வீதி அருகில் விழுந்தனர் .
காயங்கள் ஏற்பட்டு இருக்க கூடும் என்பதை காணொளியை பார்க்கும் பொழுது தெரிகிறது .
இலங்கையில் வாகன சாரதிகள் இவ்விதம் கொலை வெறியில் ஈடுபட்டுள்ளது மிக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கை காவல்துறை
லஞ்சம் பெற்று ஊறி போன இலங்கை காவல்துறையின் செயல்பாடுகள் காரணமாக வாகன சாரதி கோபம் அடைந்து இவ்விதம் செய்திருக்க கூடும் என சந்தேகிக்க படுகிறது .
குறித்த வானில் பயணித்த பெண்கள் சத்தம் இடுவதையும் ,அதை பதிவு சையது வெளியிட்டுள்ளனர்


வவுனியாவில் பெண் வெட்டி கொலை
வவுனியாவில் பெண் வெட்டி கொலை
வவுனியாவில் பெண் வெட்டி கொலை செய்ய பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
வவுனியா பகுதியில்
வவுனியா பகுதியில் கணவன் ஒருவர் மனைவியை வெட்டி கொலை செய்துள்ளதாக செய்தி சமூக ஊடகத்தில் வெளியாகியுள்ளது .
மேற்படி சம்பவத்தை கட்டு படுத்த காவல்த்துறை துப்பாக்கி பிரயோகம் செய்தே நிலைமையை கட்டு படுத்தி கொண்டு வந்ததாக தெரிவிக்க படுகிறது .
என்ன நடந்தது
எனினும் அங்கு முழுமையாக என்ன நடந்தது என்பது தொடர்பாக தெரியவரவில்லை .
தகவல்கள் கிடைக்க பெற்றதும் இணைக்க படும் .



- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்

- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்

- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்

- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்

- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்

- டெங்கு பாதிப்பு மாணவருக்கு பாதுகாப்பு ஆடை

- 12 நாட்களில் இலங்கையில் 13,292 டெங்கு வழக்குகள்

- ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கடும் போர் மூண்டது

- ஈரானின் ஐந்து நகரங்கள் மீது தாக்குதல்

- வளைகுடா நாடுகள் முழுவதும் ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்

- தங்கல்லே கடற்பகுதியில் காணாமல் போன 19 வயது இளைஞரின் சடலம் மீட்பு

- இலங்கை கடற்படையின் புதிய தளபதியான வைஸ் அட்மிரல் டாமியன் பெர்னாண்டோ

- ஜோர்டான் குவைத் கத்தார் அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல்

வவுனியாவில் கிணற்றில் பெண்சடலம் மீட்பு
வவுனியாவில் கிணற்றில் பெண்சடலம் மீட்பு
வவுனியாவில் கிணற்றில் பெண்சடலம் மீட்பு வவுனியாவில் தனியார் கல்வி நிலைய கிணறு ஒன்றில் இருந்து உயர்தர மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில்
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் உயர்தர வர்த்தகப் பிரிவு
மாணவர்களுக்கு காலையில் இருந்து மதியம் 12 மணிவரை வகுப்பு நடைபெற்றுள்ளது.
குறித்த கல்வி நிலையத்தில் உயர்தர வர்த்தகபிரிவு 2025 இல் கல்வி கற்ற குறித்த மாணவி நீண்ட நேரமாகியும் வீடு வந்து சேராமையால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குறித்த மாணவியை தேடியுள்ளனர்.
இதன்போது, குறித்த மாணவியின் புத்தகப்பை, துவிச்சக்கர வண்டி என்பன மாணவி கல்வி பயின்ற தனியார் கல்வி நிலையத்தில் காணப்பட்டதுடன்,
அக் கல்வி நிலைய வளாகத்தில் இருந்த கிணற்றின் அருகே மாணவியின் செருப்பும் காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பெற்றோர் மற்றும் கல்வி நிலைய நிர்வாகத்தினர் வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார், மாநகர சபையினர், கிராம அலுவர், கிராம மக்கள்,
மாணவியை சடலமாக மாலை மீட்டு எடுத்தனர்
மாணவர்கள் எனப் பலரும் இணைந்து 40 அடி ஆழமான கிணற்றில் தேடுதல் மேற்கொண்டு குறித்த மாணவியை சடலமாக மாலை மீட்டு எடுத்தனர்.
குறித்த சம்பவத்தில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தகப் பிரிவில் கல்வி பயிலும் வவுனியா, கோமரசன்குளம் பகுதியைச் சேர்ந்த மாணவியே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
சடலமாக மீட்கப்பட்ட மாணவியின் உடலம் வவுனியா வைத்தியாசலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்ர்கள்.
- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்

- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்

- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்

- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

வவுனியாவில் கிணற்றில் வீழ்ந்த இருயானை
வவுனியாவில் கிணற்றில் வீழ்ந்த இருயானை
வவுனியாவில் கிணற்றில் வீழ்ந்த இருயானை வவுனியா வடக்கு, கரப்புக்குத்தி பகுதியில் இரண்டு யானைகள் கிணற்றில் வீழ்ந்த நிலையில் ஒரு யானை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன் மற்றைய யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
பாதுகாப்பற்ற விவசாய கிணறு
குறித்த பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற விவசாய கிணறு ஒன்றில் யானைகள் தவறி வீழ்ந்துள்ளதாக அந்த
பகுதியை சேர்ந்த கிராம அலுவலருக்கு இன்று (25) காலை தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கிராம அலுவலர், வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும், பொலிசாருக்கும் உடனடியாக தெரியப்படுத்தியிருந்தார்.
சம்பவ இடத்திற்கு சென்ற வனஜீவராசிகள் திணைக்களத்தினர் பெரும் சிரமத்திற்கு மத்தியில் ஒரு யானையினை மீட்டுள்ளனர்.
யானை நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அதன் சடலம்
மற்றைய யானை நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அதன் சடலம் மீட்கப்பட்டது.
குறித்த இரு யானைகளும் ஒன்றன் பின் ஒன்றாக கிணற்றுக்கள் வீழ்ந்தமையால் ஒரு யானை சேற்றில் புதையுண்டு உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக கனகராயன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியாவில் மோட்டார்சைக்கிள் திருடன் கைது
வவுனியாவில் மோட்டார்சைக்கிள் திருடன் கைது
வவுனியாவில் மோட்டார்சைக்கிள் திருடன் கைது ,வவுனியாவில் மோட்டார் சைக்கிள் திருடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா பகுதியில் ஐந்து மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபன் ஒருவரே ,தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் வவுனியா வீர பெரியகுளம், மதவாச்சி ,வவுனியா ,முதலாம் குறுக்குத்தெரு ,மதவாச்சி அட்விரக்கட ,செட்டிகுளம் ,ஆகிய பகுதிகளில் மோட்டார் சைக்கிள் காணாமல் போயிருந்தது.
குறித்த திருட்டு சம்பவத்துடன் தொடர்பு கொண்ட நபரை தற்பொழுது மடக்கிப் படிக்கப்பட்டுள்ளார்.
தற் பொழுது சிதம்பர புறம் வீதி ஈரம் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 27 வயது வாலிபன் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பொழுது ஐந்து மோட்ட சைக்கிள்களும் முறையே, 5,802,99 5 லட்சம் மூன்று லட்சம் ஒன்பது லட்சத்து 70 ஆயிரம் விலைகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது .
குறித்த வாலிபன் தற்பொழுது கைது செய்யப்பட்ட நிலையில் ,போலீசார் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் வீடுதோற்க காரணம் இதுதான்
வவுனியாவில் வீடுதோற்க காரணம் இதுதான்
வவுனியாவில் வீடுதோற்க காரணம் இதுதான் உள்ளூராட்சி சபைத் தேர்தல் வவுனியாவில் வீடு தோற்க காரணம் என்ன என இலங்கை தமிழரசு கட்சி முன்னாள் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாநகரசபையில் தமிழரசுக் கட்சி தோல்வியடைந்தமைக்கு சத்தியலிங்கத்தின் செயற்பாடே காரணம். அவர் அரசியலை நாகரிகமாக செய்யவில்லை
தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
என தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் அவரது அலுவலகத்தில் நேற்று (12.05) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முள்ளிவாய்க்கால் நினைவு நாளை நெருங்கிக் கொணடிருக்கின்றோம். இறுதி யுத்ததில் சிறிலங்கா இராணுவத்தால் கொத்துக் கொத்தாக பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் என்பது பகிரங்கமான உண்மை.
விடுதலைப் புலிகளின் யுத்தம் மௌனிக்கப்படுவதற்கு முன்னர் எமது மக்களை முள்ளிவாய்க்கால் நோக்கி நகர்த்தியவர்கள் வெளிநாட்டு அரசுகள் தான். எனவே அவர்களுக்கு சகலதும் தெரியும்.
ஐ.நா அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள்
எனவே, ஐ.நா அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள் இதற்கு பொறுப்புச் சொல்ல வேண்டும். நயவஞ்சக தனமாக எமது மக்களை நம்ப வைத்து, இனவழிப்பு நடந்தது.
இலங்கையில் தமிழருக்கு எதிராக இனவழிப்பு நடந்தது என்பதை பகிரங்கமாக வெளிபடுத்தி கனடாவில் நினைவு தூபி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
பிரன்டன் நகர மேயர் அந்த நிகழ்சியை நடத்தியுள்ளார். இது எமது இனத்தின் முதலாவது மைல்கல் என்று கூறலாம். யுத்தம் மௌனிக்கப்பட்ட பின் கொல்லப்பட்டவர்கள் அதிகம்.
சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டனர். காணாமல் போகச் செய்யப்பட்டனர். அதேபோல் காயமடைந்து இருந்தவர்கள் முள்ளிவாய்காலில் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டார்கள்.
முகாம்களில் இருந்தவர்களில் பலர் காணாமல் செய்யப்பட்டனர். கொல்லப்பட்டனர்.
இனவழிப்பு நடக்கவில்லை
இதற்கு சாட்சிகள் ஏராளம். இப்படி நடந்த இனவழிப்பை எமது தமிழர்களில் இருந்து இனவழிப்பு நடக்கவில்லை. போர்க்குற்றம் தான் நடந்தது என ஐ.நா வர எடுத்துச் சென்று மாற்று கதைகளை சொல்லியிருந்தார்கள்.
கனேடிய அரசு கூறுகிறது இனவழிப்பு நடந்தது இதை ஏற்றுக் கொள்ளாதாவர்கள் கனடாவில் இருந்து வெளியேறுங்கள் என.
நாம் கூறுகின்றேன் தமிழரசுக் கட்சியில் தலைமைப் பதவியில் இருப்பவர்கள் இனவழிப்பு நடக்கவில்லை என கடந்த காலங்களில் கூறியுள்ளார்கள்.
தமிழரசுக் கட்சியில் நிர்வாகப் பொறுப்பு
40 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டும் எங்களுடன் இருந்த கோடரி காம்புகளால் நீதி கிடைக்கவில்லை. தமிழரசுக் கட்சியில் நிர்வாகப் பொறுப்புக்களில் இருந்து இனவழிப்பு நடக்கவில்லை எனக் கூறியவர்கள் வெளியேற வேண்டும்.
தமிழரசுக் கட்சி மட்டும் தான் எமது போராட்டத்தை கடந்த வேண்டியவர்கள். கனடா போன்று ஒவ்வொரு நாட்டிலும் நினைவுத் தூபி அமைப்பதற்கான சந்தர்ப்பங்கள் வந்துள்ள நிலையில்
இனவழிப்பு நடக்க வில்லை என்று கூறியவர்கள் தமிழர் தேசத்தில் அரசியல் செய்யாது வெளியேறுங்கள். எங்களை வெளியேற்றி விட்டு நீங்கள் குளிர் காய இடமளிக்க முடியாது.
சபைகளை கைப்பற்றி ஆட்சி செய்தால் எல்லாம் கிடைத்து விடும் என நினைகிறார்கள். அதுவல்ல. தேசிய மக்கள் சக்தி எமது பொது எதிரி. எதிரியை எப்பவும் வீழத்தலாம்.
அவர்கள் தானாகவே வெளியேறுவார்கள். தமிழரசுக் கட்சியில் ஒரு சிலர் எடுத்த தீர்மானஙகளால் தான் அவர்களுக்கு இடம் கிடைத்தது. சட்டத்தரணிகளால் வழக்கு போடப்பட்டு தான் தமிழரசுக் கட்சி சின்னாபின்னமாகியுளளது.
முன்னாள் வடமாகாண சபை
குடத்தனையில் சுமந்திரன் தான் வாக்களித்து விட்டதாக கை காட்டுவதைப் பார்த்தேன். முன்னாள் வடமாகாண சபை உறுப்பனர் சுகிர்தனுக்கும் அது தான் வட்டாரம்.
இருவரும் இருந்தும் கூட அந்த வட்டாரத்தில் அவர்களால் வெல்ல முடியவில்லை. அதேபோல் வவுனியாவில் கடந்த முறை 8 ஆசனங்களை நாங்கள் மாநகரசபையில் பெற்றிருந்தோம்.
இந்த முறை ஒன்று கூட இல்லாமல் போயுள்ளது. தமிழரசுக் கட்சியின் செயற்பாடே அதற்கு காரணம். சத்தியலிங்கத்தின் செயற்பாடு அதற்கு காரணமாக அமைந்தது. அரசியலை நாகரிகமாக அவா செய்யவில்லை.
அதனால் மக்கள் சரியான பாடத்தை கொடுத்துள்ளார்கள். உங்களது தொகுதிகளில் தோற்று விட்டு ஏனைய தொகுதிகைளை வைத்து நாம் வென்று விட்டோம் என மார்தட்ட வேண்டாம்.
அதேபோல் மட்டக்களப்பில் கோட்டைக்கல்லாறு தோற்கடிக்கப்பட்டுள்ளது. புளியந்தீவு தோல்வி. குலநாயகத்தில் வல்வெட்டித்துறை ஒட்டுமொத்த தொகுதியும் தோல்வி.
முல்லைத்தீவு நகரம் ரவிகரன், பீற்றர் இளஞ்செழியன் சேர்ந்து வேலை செய்தார்கள் தோல்வி. ரவிகரன் நெடுக நடந்து திரியும் கொக்கிளாய் பிரதேசம் தேசிய மக்கள் சக்தியின் சிங்கள உறுப்பினா வென்றுள்ளார்.
சிறிதரன் ஒட்டுமொத்தமமாக வென்றுள்ளார். மண்முனை சிறிநேசனின் வட்டாம் 10 இல் 8 ஐ வென்றுள்ளார். நேரடியக ஆட்சியமைக்க கூடியதாகவுள்ளது.
புதுக்குடியிருப்பு எனது தொகுதி அங்கு 12 இல் 11 வென்றுள்ளோம். அந்த 11 பேரும் நான் இருக்கும் போது தெரிவு செய்யப்பட்டவர்கள். நல்ல வேளை அவர்களை மாற்றவில்லை. ஒருவரை என்னுடைய வட்டாரத்தில் மாற்றி போட்டார்கள்.
அவர் தோல்வி. வெற்றிக்கு காரணமானவர்கள் தமிழ் தேசியத்துடன் பயணித்தவர்கள். மற்றவர்களுக்கு நலல விடயத்தை மக்கள் சொல்லியுளளார்கள். இதன்பின்னாவது அவர்கள் திருந்தி நடக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்

- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்

- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்

- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

வவுனியாவில் 31வது கழிப்பறை |கொண்டாடிய மக்கள்
வவுனியாவில் 31வது கழிப்பறை |கொண்டாடிய மக்கள்
வவுனியாவில் 31வது கழிப்பறை |கொண்டாடிய மக்கள்
வவுனியாவில் 09 வது கழிப்பறை கையளிப்பு |வன்னி மைந்தன் திட்டம் வெற்றி
வவுனியாவில் 09 வது கழிப்பறை கையளிப்பு |வன்னி மைந்தன் திட்டம் வெற்றி
வவுனியாவில் 09 வது கழிப்பறை கையளிப்பு |வன்னி மைந்தன் திட்டம் வெற்றி
வவுனியாவில் 13 வது கழிப்பறை கையளிப்பு |வன்னி மைந்தன் திட்டம் வெற்றி
வவுனியாவில் 13 வது கழிப்பறை கையளிப்பு |வன்னி மைந்தன் திட்டம் வெற்றி
வவுனியாவில் 13 வது கழிப்பறை கையளிப்பு |வன்னி மைந்தன் திட்டம் வெற்றி
நாய் சுட்டுக் கொலை வவுனியாவில்
நாய் சுட்டுக் கொலை வவுனியாவில்
நாய் சுட்டுக் கொலை வவுனியாவில் வவுனியா மருத்துவமனைக்கு முன்பாக நாய் ஒன்று வாயு துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
வவுனியா மருத்துவமனைக்கு முன்பாக கடமையில் ஈடுபட்ட பாதுகாப்பு உத்தியோகத்தரினால் ஒருவர் இந்த நாயை வியாழக்கிழமை சுட்டுக் கொன்றதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .
மருத்துவமனையின் பிரேத அறையின் அருகே நின்ற நாய் மீது துப்பாக்கி பிரயோகித்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயம் ஏற்பட்ட நிலையில் வீதியால் மரணித்து ,அதிக இரத்த போக்கின் காரணமாக இறந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள.
இது குறித்த விசாரணையே போலீசார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாய் பிரேத அறைகளுக்கு பக்கத்தில் இருந்ததால் ஆவியாக இருக்கும் என்று அவர் பயந்து இதை சுட்டுக் கொன்று இருக்க கூடும் என தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
எனினும் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ள நிலையில் , இந்த சம்பவம் மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
மருத்துவர் காயம் வவுனியாவில் வாள்வெட்டு
மருத்துவர் காயம் வவுனியாவில் வாள்வெட்டு
மருத்துவர் காயம் வவுனியாவில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று கடந்த இரவு பதிவாகியுள்ளது .
வவுனியா மாரம்பைக்குளம் அரசடி நகர் பகுதியில் நாய்கள் காப்பகம் ஒன்றுக்குள் நுழைந்த, வாள்வெட்டு தெரு ரவுடி கும்பல் ,திடீர் கோடாரி வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளது .
நாய்கள் காப்பகத்தின் நுழைவயில் கதவு கோடரியால் கொத்தி சேதமாக்க பட்டுள்ளதுடன் ,அவ்வேளை அங்கிருந்த நாய்கள் பராமரிப்பு கால்நடை மருத்துவர் மீதும் கோடரி தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இதில் மருத்துவருக்கு இரண்டு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் அவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார் .
நோர்வேயில் இருந்து சென்று நாய்கள் காப்பக்கத்தை நடத்தி வரும் நோர்வே ராசி என்பவரின் நாய்கள் காப்பகம் மீதே இந்த வாள்வெட்டு குழுவின் கோடரி தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
குறித்த நுழை வாயில் கதவு ஒன்றரை லட்சம் ரூபா செலவில் அமைக்க பட்டிருந்தது .
அவ்வாறான விலை உயர்ந்த பாதுகாப்பு கதவே தற்போது இந்த கூலி குழு ஊடாக வெட்டி சேத படுத்த பட்டுள்ளது .
வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் நோர்வே ராசி அவர்கள் கண்ணீரோடு கதறி விடயத்தை தெரியப்படுத்தியதை அடுத்து, அந்த டிக் டாக் நேரலையில் கலந்து கொண்ட உறவுகளில் முக்கியமானவர்கள் உடனடியாக போலீசாருக்கு தொடர்பு கொண்டு விடயத்தை தெரியப்படுத்தினர் .
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வவுனியா காவல்துறையினர் விசாரணைகளை நடத்தியுள்ளனர் .
குறித்த நாய் காப்பகத்தை முடக்கும் நடவடிக்கையில் ,வெள்ளை வேட்டி அரசியல் கட்சி பெருச்சாளி ஒன்று ஈடுபட்டு வருவதாகவும் ,
அவர்களின் நேரடி வழிகாட்டலில் இந்த தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இலங்கையில் புதிய நேர்மையான ஆட்சி இடம்பெற்று வரும் நிலையில் ,இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இந்த சம்பவம் இடம்பெற்ற பொழுது ,ஆளுகின்ற அனுரகுமார திசநாயக்கவின் கட்சி உறுப்பினர்களுக்கும் தெரிவிக்க பட்ட நிலையில் ,அவர்களும் காவல்துறையை தொடர்பு கொண்டு நேரடியாக சம்பவம் தொடர்பில் தெரியப்படுத்தினர் .
மக்கள் அரசாக விளங்கும் அனுரகுமார திசாநாயக்க கட்சியினர் மக்கள் நலன் அக்கறையுடன் செயல்பட்ட விடயம், எம்மை வியப்பில் உறைய வைத்ததுடன் ,மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
Akd கட்சி உறுபினர்கள் சம்பவம் இடம்பெற்ற நாய்கள் காப்பகம் சென்று பார்வையிட்டு ,உரிய நடவடிக்கையை மேலதிகமாக மேற்கொள்வார்கள் என எதிர் பார்க்க படுகிறது .
கடந்தஆட்சி காலத்தில் லஞ்ச ஊழல் பெருச்சாளிகளாக காணப்படும் இவ்வாறான சமூக விரோதிகள் உள்ளவரை ,நாடும் மக்களும் எப்படி பாதுகாப்பாக வாழ்வார்கள் என்ற கேள்வியை ,இந்த சம்பவம் எடுத்து காட்டியுள்ளது .
எனவே இன்றைய ஆளும் அரசு, மக்களை மிரட்டும் இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி,
சம்பந்த பட்ட நபர்களையும் ,அவர்களின் பின்னால் மறைந்திருக்கும் அரசியல் கட்சிக்கும், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அன்பு கோரிக்கை விடுகின்றோம் .
Akd கட்சி உரிய நடவடிக்கை மேற்கொள்ள விட்டால் அதுவே அனுரகுமார திஸாநாயக்கவின் நல் ஆட்சிக்கும் பெரும் கலங்கத்தை ஏற்படுத்தும் .
ஆகவே Akd கட்சியினர் விழிப்புடன் செயல் படவேண்டிய காலமாக இது காணப்படுகிறது.
- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்

- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்

- டெங்கு பாதிப்பு மாணவருக்கு பாதுகாப்பு ஆடை

- 12 நாட்களில் இலங்கையில் 13,292 டெங்கு வழக்குகள்

- தங்கல்லே கடற்பகுதியில் காணாமல் போன 19 வயது இளைஞரின் சடலம் மீட்பு

- இலங்கை கடற்படையின் புதிய தளபதியான வைஸ் அட்மிரல் டாமியன் பெர்னாண்டோ

- டெங்கு அரச அலுவலகங்கள் பூட்டு

- 2027-ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட உரை நவம்பர் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது

நால்வர் காயம் வவுனியாவில் வாள்வெட்டு
நால்வர் காயம் வவுனியாவில் வாள்வெட்டு
நால்வர் காயம் வவுனியாவில் வாள்வெட்டு ,வவுனியா பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் நால்வர் காயமடைந்துள்ளதாக வவுனியா செய்திகள் தெரிவிக்கின்றன.
முகமூடி அணிந்த நிலையில் வாள்களுடன் சென்று நபர்கள் அங்கிருந்த ஐயர் உள்ளிட்ட கணவன் மனைவி மற்றும் இருவர் மீது கடும் வாள்வெட்டு தாக்குதலை நடத்தி இருக்கின்றனர்.
மர்ம நபர்கள் நடத்திய திடீர் வாள்வெட்டு தாக்குதலில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் நடத்தப்பட்ட இந்த வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்திற்கான காரணம் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை .
இது திட்டமிடப்பட்டு கூலி குழுக்களினால் வரவழைக்கப்பட்டஅந்த நபர்களூடாக இந்த தாக்குதல் இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது ..
தாக்குதலை நடத்தியவர்கள் தமது பால் பட்டு தாக்குதல் வெற்றி பெற்றதை அடுத்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்
இவ்வாறு தப்பி சென்றவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் தற்பொழுது குற்றத்தை தடுப்பு பிரிவுகள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது .
வவுனியா பகுதியில் இடம்பெற்ற இந்த வாள் வெட்டுச் சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளதாக அந்த பகுதி மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டு இருக்கின்றனர்.
- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்

- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்

- டெங்கு பாதிப்பு மாணவருக்கு பாதுகாப்பு ஆடை

- 12 நாட்களில் இலங்கையில் 13,292 டெங்கு வழக்குகள்

- தங்கல்லே கடற்பகுதியில் காணாமல் போன 19 வயது இளைஞரின் சடலம் மீட்பு

- இலங்கை கடற்படையின் புதிய தளபதியான வைஸ் அட்மிரல் டாமியன் பெர்னாண்டோ

- டெங்கு அரச அலுவலகங்கள் பூட்டு

- 2027-ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட உரை நவம்பர் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது

வவுனியாவில் தாய்இரண்டு பிள்ளைகள் மாயம்
வவுனியாவில் தாய்இரண்டு பிள்ளைகள் மாயம்
வவுனியாவில் தாய்இரண்டு பிள்ளைகள் மாயம் .வவுனியாவில் தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் காணாமல் போயுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .
பாடசாலைக்கு சென்ற மாணவர்களை அழைத்துச் சென்ற இளம் தாய் ஒருவர் தற்பொழுது பிள்ளைகளுடன் காணாமல் போய் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
32 வயதுடைய இளம் தாயும் அவரது 11 மற்றும் 8 வயது உடைய பிள்ளைகள் பாடசாலைக்கு சென்று வீடு திரும்பவில்லை என அவர்கள் குடும்பத்தினால் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .
கோவிலா புதுக்குளம் பகுதி குடும்பம் மாயம்
கோவிலா புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த மேற்படி குடும்ப உறவுகளே காணாமல் போயிருந்தார் .
இவர்கள் கடத்தப்பட்டார்களா, அல்லது கடத்தி படுகொலை செய்யப்பட்டார்களா ,அல்லது வேறு இடங்களுக்கு ஏதும் சென்றார்களா என்பது தொடர்பாக தெரியவரவில்லை .
தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன .
இலங்கையில் காணாமல் போகின்ற இவ்வாறான பல நபர்கள் இறுதியில் சடலங்கலாக மீட்க கப்படுகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
கடத்திச் செயல்படுவது மற்றும் ,வாகனங்கள் ஊடாக அவர்களை அடித்து விபத்தில் இறந்ததாக தோற்றப்பட்ட ஏற்படுத்தி, படுகொலை செய்வதற்கான நடவடிக்கைகள் அங்கு அதிகமாக காணப்படுகின்றன.
அவ்வாறன நிலையில் இந்த இரண்டு சிறுவர்களும் தாயும் காணாமல் போயுள்ளதே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளம் தாயும் அவரது இரண்டு சிறுவர்களையம் வவுனியாவில் காணவில்லை
32 வயதுடைய இளம் தாயும் அவரது இரண்டு சிறுவர்களுமே காணாமல் போய் உள்ளனர்.
காணாமல் போன இவர்கள் சம்பவம் அந்த பாவனையா பகுதி மக்கள் மத்தியில் வேகமாக பரவியது .
அடுத்து மக்கள் மத்தியில் ஒரு வித பதட்டம் காணப்படுகின்றது .
காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் இலங்கையின் போலீசார் மற்றும்குற்றவியல் தடுப்பு பிரிவு ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் இவர்கள் பாடசாலை சென்று வந்த பகுதியில் கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கமராக்கள் சோதனை செய்யப்பட்டு அதிலிருந்து தடயங்கள் கிடைக்கிறதா என்பது தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாக புதிய செய்திகள் தெரிவிக்கின்றன .
இலங்கையில் தொடராக இவ்வாறு காணாமல் போன சம்பவங்கள் அதிகரித்து வருவதும்,
வீதி ஓரங்களில் மற்றும் நீர்நிலைகள் உள்ளிட்டவர்களில் இருந்து நாள்தோறும் சடலங்களும் எடுக்கப்பட்டு வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
இலங்கை செல்லும் மக்கள் மத்தியில் ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது .
காணாமல் போன இவர்கள் பத்திரமாக கண்டுபிடிப்பார்களா ,அல்லது அவர்கள் சுடலங்களாக மீட்கப்படுவார்களா என்பது மக்கள் மத்தியில் பேசிப் பொருளாக காணப்படுகின்றது.
- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்

- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்

- டெங்கு பாதிப்பு மாணவருக்கு பாதுகாப்பு ஆடை

- 12 நாட்களில் இலங்கையில் 13,292 டெங்கு வழக்குகள்

- தங்கல்லே கடற்பகுதியில் காணாமல் போன 19 வயது இளைஞரின் சடலம் மீட்பு

- இலங்கை கடற்படையின் புதிய தளபதியான வைஸ் அட்மிரல் டாமியன் பெர்னாண்டோ

- டெங்கு அரச அலுவலகங்கள் பூட்டு

- 2027-ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட உரை நவம்பர் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது

வவுனியாவில் கதறும் நோர்வே ராஜி
வவுனியாவில் கதறும் நோர்வே ராஜி
வவுனியாவில் கதறும் நோர்வே ராஜி நாய்களின் சரணாலயம் என்று அமைப்பதற்காக நோர்வையிலிருந்து வருகை தந்திருந்த ராஜி அவர்களுக்கு வவுனியாவில் இடம் பெற்ற துயர சம்பவம் .
இது தொடர்பாக எம்முடன் அவர்கள் தனது மன குமுறலை கொட்டி தீர்க்கின்றார் .
நோர்வையில் இருந்து தனது தாயகமான தனது இலங்கை வவுனியாவை நோக்கி சென்று அங்கு ,கட்டாகாளிகளாக அல்லது கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்ற நாய்களை எடுத்து.
கதறும் விலங்கு பாதுகாவலர் ராஜி
சரணாலயம் என்று அமைத்து ,அவர்களை பாதுகாக்கும் நோக்குடன் ஒரு நாய்கள் சரணாலயம் ஒன்றை நிறுவி வந்தார் .
விலங்கு பிரியராக காணப்படும் ராஜீ தனது சொந்தக்காணியில் ,இந்த நாய்களினுடைய சரணாலயத்தை அமைத்து ,அவர்களை பேணி பாதுகாக்கும் ஒரு மனிதாபிமான நடவடிக்கையிலும், விலங்குகள் ஆர்வலராக காணப்பட்டார் .
அவ்வாறு காணப்பட்ட நோர்வே ராஜி அவர்கள் நாய்கள் சரணாலயம் அமைப்பதற்கு , திடீரென இலங்கையுடைய அரசு அதிகாரிகளின் தலையீட்டினால் ,அவை தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கின்றன .
அனுமதி பெறாமல் இந்த விடயங்கள் நகர்த்தப்பட்டதாகவும், அனுமதி பெற்ற பொழுதும் சில அதிகாரிகளினால் வேண்டப்படாத முறையில் ,சில நகர்வுகள் நகர்த்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார் .
நோர்வே ராஜி அமைக்கும் நாய்கள் சரணாலயம்
தனது மனிதநேய விலங்குகள் காப்பகத்தை அமைக்கும் பணியினை ,முற்று முழுதாக முடக்குகின்ற ,அபாயத்தில் காணப்படுவதாக, தனது வருத்தத்தையும் கவலையும் அவர் வெளியிட்டு இருக்கின்றார்.

எமக்கு இன்று வழங்கிய நேர்காணலில் பொழுது பல்வேறுப்பட்ட விடயங்களை அவர் தெரிவித்திருக்கின்றார்.
அதில் மகாநாராசபை தமக்கு எதிர்வித சிக்கல்களையும் நெருக்கடியும் தரப்படவில்லை என்கிறார் .
ஆனால் சுகாதார அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் என ,அங்கு வருகின்றவர்களே தமக்கு ,ஒருவருக்கு ஒருவர் ,மாறி மாறி ,வேறு விதமான கதைகளை சொல்வதாகவும் .
அதனால் இந்த நாய்கள் சரணாலயத்தை ,முற்று முழுதாக மூடிவிடும் நெருக்கடி ஒன்றை ,அவர்கள் தருவதற்கு முயல்வதாக கவலை வெளியிட்டுள்ளார் .
அவருடைய முழுமையான பதிவுகள், இந்த காணொளியில் கீழே இணைக்கப்படுகிறது ,அதில் அழுத்தி நீங்கள் பார்வையிட முடியும்.
- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்

- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்

- டெங்கு பாதிப்பு மாணவருக்கு பாதுகாப்பு ஆடை

- 12 நாட்களில் இலங்கையில் 13,292 டெங்கு வழக்குகள்

- தங்கல்லே கடற்பகுதியில் காணாமல் போன 19 வயது இளைஞரின் சடலம் மீட்பு

- இலங்கை கடற்படையின் புதிய தளபதியான வைஸ் அட்மிரல் டாமியன் பெர்னாண்டோ

- டெங்கு அரச அலுவலகங்கள் பூட்டு

- 2027-ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட உரை நவம்பர் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது

வவுனியாவில் தந்தை மகன்மீது ரவுடிகள் தாக்குதல்
வவுனியாவில் தந்தை மகன்மீது ரவுடிகள் தாக்குதல்
வவுனியாவில் தந்தை மகன்மீது ரவுடிகள் தாக்குதல் நடத்தியதில் தந்தை தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது .
வீடு திரும்பி கொண்டிருந்த மகனாக ,விளங்கும் கிரு மீது ,வழியில் நின்ற ரவுடிகள் , வழிமறித்து போத்தல்களை கொண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர் .
பின்னர் மகன் மீது தாக்குதலை நடத்தியது ஏன் என ,கேள்வி கேட்ட தந்தையை சரமாரியாக கூலி குழு தாக்கினர் .

தலையில் பலமான காயங்கள்
இதில் தந்தையின் தலையில் பலமான காயங்கள் ஏற்பட்ட நிலையில் ,தற்போது வவுனியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் .
தலையில் நான்கு தையல் போடப்பட்ட நிலையில் அந்த வாயதன தந்தை காணப்படுகின்றார் .
இவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ,இவர்களை கைது செய்திடும் நடவடிக்கையில் , போலீசார் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது .
தாக்குதல் நடத்திய கூலி குழுக்கள் கைது செய்யப்பட்டால் ,இவர்கள் மீது தாக்குதலை நடத்திட இவர்களை கூலிக்கு அமர்தியது யார் என்கின்ற விடயம் தெரிய வரும் என தெரிவிக்க படுகிறது .
வவுனியாவில் மக்கள் நலன் உதவி திட்டம்
வவுனியாவில் மக்கள் நலன் உதவி திட்டத்தை முன்னெடுத்து செல்லும் கிரு மீது ,அந்த வேலைத்திட்டத்தை ஏற்று கொள்ள முடியாத மாற்று அணிகள் இந்த தாக்குதலைநடத்தி இருக்க கூடும் என கருத படுகிறது .
பிரான்சில் இருந்துசென்று மக்கள் பணத்தில் உதவிகளை புரிந்து வரும் குழாய் கிணறு நபர் ஒருவர் ,கிருவுக்கு அச்சறுத்தல் விடுத்துள்ளார் .
அவ்வாறான அச்சுறுத்தல் விடுக்க பட்ட மறுதினம் இந்த தக்குதல் இடம்பெற்றுள்ளது .
எனினும் தந்தை மகன்மீது தாக்குதல் நாடத்திய கூலி குழுக்கள் கைது செய்யப்பட்டால் மட்டுமே விடயங்கள் தெரியவரும் .
இதில் அருவருக்க தக்க விடயம் என்னவனென்றால் வவுனியாவில் தந்தை மகன் மீது தாக்குதல் நடத்த பட்ட செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன .
வவுனியாவில் மாற்று குழுக்களுக்கு அதாரவாக செய்லபடும் அத்தனை ஊடக நபர்களும் இதனை மறைந்துள்ள செயல் காணப்டுகிறது .
கஞ்சா,போதை,கற்பழிப்பு ,என்பனவற்றை நாள்தோறும் தலைப்பு செய்திகளாக பதிவேற்றும் வவுனியா ஊடக விரும்பிகள் ,இதனை மூடி மறைத்து கூலி குழுக்களை காப்பாற்ற உதவிகளை புரிந்துள்ளன .
வவுனியாவில் மிக பெரும் அச்சுறுத்தல் கொலை மிரட்டல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது
இந்த சம்பவத்தை மூடி மறைத்து அவர்கள் சார்ந்துள்ள அரசியல் கட்சிகளை காப்பாற்றும் நடவடிக்கையில் இவர்கள் ஈடுபட்டுள்ள செயல் ,வெட்கப்பட வேண்டிய ஒன்று என மக்கள் நலன் மீது அக்கறை கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர் .
வவுனியாவில் கிருமீது மர்ம குழு தாக்குதல்
வவுனியாவில் கிருமீது மர்ம குழு தாக்குதல்
வவுனியாவில் கிருமீது மர்ம குழு தாக்குதல் ,இன்று இரவு 10 00 மணியளவில் கிரு மற்றும் தந்தை மீது மர்ம குழு தாக்குதல்
வவுனியா பகுதியில் வைத்து குழாய் கிணறு உதவி திட்டம் நடைமுறை படுத்த பட்டு வரும் கிரு மற்றும் அவரது தந்தை மீது மர்ம குழு திடீர் தாக்குதலை நடத்தியுள்ளது .
போத்தல்கள் சகிதம் வருகை தந்த ஐந்து முதல் பத்து பேர் கொண்ட மர்ம ரவுடி கூலி குழுக்கள் கிருமீது திடீர் தாக்குதலை நடத்தினர் .
மகன் மீது தாக்குதல்
மகன் மீது தாக்குதல் நடத்துவதை கண்டு அதிர்ந்த தந்தை அதனை தட்டி கேட்க சென்ற பொழுது ,அவர் மீதும் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
சம்பவத்தை அறிந்து களத்திற்கு வருகை தந்த போலீசார் விசாரித்து பின்னர் அம்புலன்ஸ் மூலம் வவுனியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
டிக் டாக் நிகழ்வு நேரலையில்,தோழர் கிரு தனது கணக்கின் ஊடாக தனது உதவி திட்டம் தொடர்பிலான உதவி கோரல் கருத்தை முன்வைத்தார் .
பிரான்ஸ் குழாய் கிணறு நிறுவும் உதவி திட்டத்தை முன்னெடுத்து செல்லும் பிரான்ஸ் ராசன் என்பவரால் தனக்கு ஆபத்து உள்ளதாக தெரிவித்திருந்தார்
,.அதே பிரான்ஸ் ராசன் எனக்கும் today காலையில் கொலை மிரட்டல் விடுத்தது இருந்தார் .அத்துடன் நாம வசித்த இலங்கை நமது வீட்டையும் எமது அனுமதி இன்றி டிஃடாக்கில் வெளியிட்டு இருந்தார் .
அதன் பின்னர் கிருமீதும் அவரது தந்தை மீதும் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
அதன் பின்னர் ஈழன் நிசான் என்ற குழுவும் இவர் மீது அவர்களது டீடாக் லைவிலும் இவருக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து இருந்தனர் .
இதனை அடுத்து தற்போது .ஈழன் நிசான் ,வேட்டை என்ற நபர்கள் அதன் குழு மீதும் எமக்குபலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது .
எனவே இந்த இரு குழுக்களையும் சர்வதேச போலீசார் உதவியுடன் ,இலங்கை காவல்துறையினர் கண்காணித்து
விசாரணைகளை நடத்த வேண்டும் ,அப்பொழுது தான் இந்த தாக்குதளை நடத்தியது யார் என்பது தெரியவரும் .
Group Tiktok வாயிலாக தனி நபர் தாக்குதல்
மக்கள் ஆதரவை பெற்று மக்களுக்கு உதவி செய்வதாக கூறி கொள்ளும் இந்த Group Tiktok வாயிலாக தனி நபர் தாக்குதல் மற்றும் பழிவாங்கும் சமூக விரோத அச்சுறுத்தல்களில் ஈடுபட்டு வருவதை காண கூடியதாக உள்ளது .
கிரு மற்றும் அவரது தந்தையின் தாக்குதல் பின்புலத்தில் ஈழம் நிசான் மற்றும் பிரான்ஸ் ராசன் என்பவர் இருக்க கூடும் எனப்தாக நாம் பலமாக சந்தேகிக்கிறோம் .
அதேவேளை எமது கைபேசி வாட்ஸாப் உரையாடல் ஒட்டு கேட்க பட்டு வந்துள்ளது ,மேலும் கணணியும் கைக்கிங் செய்யப்பட்டுள்ளது ,இந்த ஒட்டு
கேட்பின் பின்புலத்தில் இந்த குழுக்கள் இருக்கலாம் என்பதாக நாம சந்தேகிக்கிறோம் .
இந்த குழுக்களின் கைபேசி ,சமூக வலைதள உரையாடல்கள் யாவும் கண்காணித்தல் தடயங்கள் ஏதும் கிடைக்க பெறலாம்
இந்த இரு குழுக்கள் தொடர்பாக மக்களே விழிப்பாக இருக்கும் படி இவ்வேளை வேண்டுதல் விடுகின்றோம்
-வன்னி மைந்தன் –
நில நடுக்கம் வவுனியாவில்
நில நடுக்கம் வவுனியாவில்
வவுனியாவில் நில நடுக்கம் மக்கள் அதிர்ச்சியில் ,இலங்கை வவுனியாவிலிருந்து 25 கிலோ தொலைவில் உள்ள அனுராதாபுரம் பகுதியில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை செய்திகள் இன்று தெரிவித்திருக்கின்றன.
இந்த பகுதியில் நில நடுக்கம் பதிவானதாகவும் அவ்வேளை மக்கள் பீதிக்கு உள்ளானதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் வரலாறு காணாத நிலநடுக்கம் அடுத்தடுத்து ஏற்படுவதால் மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது .
அதிக மக்கள் தொகை
அனுராதபுரம் என்பது அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு பகுதியாக காணப்படுகின்றது .
அதேபோல தனிப்பெரும் சிங்கள மக்கள் அதிகமாக வாழ்கின்ற ஒரு பகுதியாகும் காணப்படுகின்றது.
அவ்வாறான பகுதியாலே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட முழுமையான சேதவிப்பரண்கள் தொடர்பாக உடனடியாக தெரியவில்லை .
இந்த நிலநடுக்கம் ஏற்படுவதை அடுத்து மக்கள் மத்தியில் தொடர்ந்து ஒரு வித பீதியும் பதட்டமும் காணப்படுகிறது .
எதிர்ப்பு வரும் காலங்களில் இவ்வாறான நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என்கின்ற அச்சம் மக்கள் மத்தியில் பதிந்துள்ளதால் ,மக்கள் தற்பொழுது பெரும் பீதியில் உறைந்திருக்கின்றனர்
வவுனியாவில் டிக்டாக் ரசானை கைது செய்யக்கோரி போராட்டம்
வவுனியாவில் டிக்டாக் ரசானை கைது செய்யக்கோரி போராட்டம்
வவுனியாவில் டிக்டாக் ரசானை கைது செய்யக்கோரி போராட்டம் , இடம்பெற்றுள்ளது .டிக்டாக் மக்கள் சேவை ஆற்றி வரும் பிரான்ஸை சேர்ந்த ராசன் என்பவரையே கைது செய்யக்கோரி போராட்டம் இடம்பெற்றுள்ளது .
காவல்துறையினருக்கு லஞ்சம் வழங்கி அப்பாவி மக்களை மிரட்டி அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பாதிக்க பட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர் .
எப்படி பிரச்னை ஆரம்பித்தது ..?
டிக்டாக் ஊடக மக்களுக்கு உதவி செய்து வருகிறார் ராசன் .பாதிக்க பட்ட மக்களுக்கு குடி நீர் கிணறுகள் அமைத்து கொடுத்து ,அதன் ஊடாக மக்களுக்கு அளப்பெரும் உதவி புரிந்து வருகிறார் பிரான்ஸ் டிக்டாக் ராசன் .
இவரது காணொளிகளை டிக்டாக் ஊடாக பார்வையிடும் மக்கள் ,வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பி வருகின்றனர் .

அவ்வாறு மக்கள் பணத்தை பெற்றுக்கொள்ளும் பிரான்ஸ் டிக்டாக் ராசன் ,மக்களுக்கு அளப்பரிய உதவிகளை செய்து வருகிறார் .
100 குழாய் கிணறுகளை பிரான்ஸ் டிக்டாக் ராசன் நிறுவி கொடுத்துள்ளார் .
இவ்வாறன கால பகுதியில் நூறாவது குழாய் கிணறு நிறுவ பட்ட நிகழ்வு பெரும் கோலாகலமாக நடத்த பட்டது .
வவுனியா பகுதியில் உள்ள பாடசாலை ஓன்றில் சிறப்பு விருந்தினராக இந்த பிரான்ஸ் டிக்டாக் ராசன் அழைக்க பட்டு கவுரவிக்க பட்டு இருந்தார் .
அந்த நிகழ்வுக்கு பிரான்ஸ் டிக்டாக் ராசன் எவ்வாறு அழைக்க படுவார் என்ற கேள்வியை சமுக நல ஆர்வளர்கள் எழுப்பினர் .
மதுபோதை அருந்தி காணொளி
தமிழர் கலாச்சார பொது பண்பியலுக்கு எதிராக ,மதுபோதை அருந்தி காணொளி பகிரும் பிரான்ஸ் டிக்டாக் ராசன் ,பொதுவெளியில் மக்கள் நலன் விரும்பி ,சீர்திருத்தவாதி என எவ்வாறு கூற முடியும் என மக்கள் கேள்வி எழுப்பினர் .
அவ்வாறு கேள்வி எழுப்பியவர்கள் மீதே பிரான்ஸ் டிக்டாக் ராசன் கோபம் கொண்டு தாக்குதல் நடத்தியதாகவும் ,அந்த தாக்குதலானது ,புளியம் குளம் காவல்துறை நிலையத்தில் வைத்து ,அதே காவல்துறை முன்பாக நடத்த பதட்டதாக பாதிக்க பட்டவர்கள் தெரிவித்துள்ளனர் .
இந்த தாக்குதல் ராசன் மற்றும் ,லண்டனில் இருந்து வருகை தந்துள்ள தமிழ் பெண் ஒருவரும் இணைந்தே கூட்டாக தாக்குதல் நடத்தியுள்ளதாக பாதிக்க பட்டவர்கள் தெரிவிக்கின்றனர் .

பிரான்ஸ் டிக்டாக் ராசனை உடனே கைது செய்
அதனை அடுத்தே தற்போது பிரான்ஸ் டிக்டாக் ராசன் உடனே கைது செய்யப்பட வேண்டும் என வவுனியாவில் இன்று போராட்டம் இடம்பெற்றுள்ளது .
மூன்று நாட்களுக்குள் ராசான் கைது செய்யப்படுவார் என போலீசாரால் தெரிவிக்க பட்டதை அடுத்து ,போராட்ட காரர்கள் அங்கிருந்து விலகி சென்றனர் .
யார் இந்த லண்டன் கடைக்கார பெண் ..?
லண்டனில் கடை நடத்தி வந்த பெண் ஒருவர் .அந்த கடையினை லண்டனில் விற்று விட்டு, வவுனியாவில் தங்கியுளளாரம் .வவுனியால் டிக்டாக் பிரான்ஸ் ராசனுடன் ஒன்று பட்டு நீள்வதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர் .
வவுனியாவில் கோடி ரூபாயில் காணிகளை வாங்கி விட்டுள்ளாராம் இந்த லண்டன் பெண் .இவருக்கு கோடி பணம் எவ்வாறு கிடைத்தது .? என்கிற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .
லண்டனில் கடை வைத்து நடத்தி இருந்தால் கம்பெனி கவுசில் இவரது வருமான விடயம் யாரும் பார்க்க முடியும் .அப்படி என்றால் இவர் அதிக இலாபத்தில் கடையை நடத்தி ,அதன் பின்னர் விற்று இருப்பார் .
பல கோடி பணம்
அதனால் பல கோடி பணம் இவர் இலாபமாகவே சேமித்து இருப்பார் .எனவே பிரிட்டன் வருமானவரி திணைக்களம் இவருக்கு எவ்வாறு இவ்விதமான பெரும்
பணம் கிடைக்க பெற்றது என விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற குற்ற சாட்டை பாதிக்க பட்டவர்கள் முன் வைக்கின்றனர் .
மேலும் இலங்கை இலண்டன் தூதரகத்தில் இந்த லண்டன் பெண்ணுக்கு எதிராக பெட்டிசம் வழங்குவதுடன் ,இலங்கைக்கான பிரான்ஸ் தூதரகத்தில்
ராசன் தொடர்பான இந்த குற்ற சாட்டு மனு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள போவதாக பாதிக்க பட்டவர்கள் தெரிவிக்கின்றனராம் .
இலங்கை போலீசாரை வைத்து ,அப்பாவி மக்களை தாக்கியமைக்காக ,லண்டன் மற்றும் பிரான்ஸ் அரசுகள் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் முன் வைப்பார்கள் என எதிர் பார்க்க படுகிறது .
பச்சை மிளகாய் தாக்குகளின் பின்னர் சிக்கிய ராசன்
பச்சை மிளகாய் என்ற டிக்டாக் வாலிபன் ஒருவரை காரில் வைத்து , இதே பிரான்ஸ் டிக்டாக் ராசன் தாக்குகிறார் .
அந்த விடயம் வரவேற்பையும் ,எதிர்ப்பையும் பிரான்ஸ் டிக்டாக் ராசனுக்கு எதிராக ஏற்படுத்தியது .
குற்றம் புரிந்த பச்சை மிளகாயை கைது செய்த ராசன் ,அவரை காவல்துறையில் ஒப்படைத்து தண்டித்து இருந்தால் ,அவர் மீதான நன்மதிப்பு ,மக்கள் மத்தியில் மேலும் அதிகரித்து இருக்கும் .
சட்டத்தை தன் கையிலெடுத்து, பச்சை மிளகாய் என்ற டிக் டாக் பெயர் கொண்ட நபர் மீது, பிரான்ஸ் டிக்டாக் ராசன் வன்முறை தாக்குதல் நடத்தியது மிக பெரும் தவறு என்பதாக எதிர்தரப்பினர் குற்றம் சுமத்தி வருகின்றனர் .
காவல்துறையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து
அதனால் காவல்துறையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து பிரான்ஸ் டிக்டாக் ராசன் தாக்குகிறார், என்ற கீழ் நிலை பார்வை ராசன் மேல் வீழ ஆரம்பித்தது .
அதன் பின்னர் வவுனியா பகுதி பாடசாலைக்கு சிறப்பு விருந்தினராக ராசன் அழைத்து கவுரவிக்க பட்ட செயலும் கண்டனங்களுக்கு உள்ளாகின .
இப்பொழுது புளியங்குளம் காவல்துறை நிலையத்தில் வைத்து ,ராசன் ,மற்றும் லண்டன் பெண் ஆகியோர் தாக்குதல் நடத்தியதால் இருவரும் கைது செய்யப்பட வேண்டும் என மக்கள் வேண்டுதல் விடுத்துள்ளனர் .
பிரான்ஸ் டிக்டாக் ராசனுக்கு உதவிய காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்க பட்டுள்ளது .
மக்கள் சேவை ஆற்றிட மகத்துவம் தேடி சென்ற பிரான்ஸ் டிக்டாக் ராசனின் , சில சிந்திக்காத செயல்கள் ,தொலைதூர முற்போக்கு பார்வை அற்ற நிலையால் ,இன்று இவ்வாறு அவர் மீதான எதிர்ப்பும் போராட்டமும் வெடித்துள்ளது .
பொது தளத்தில் பணியாற்ற வரும் பொழுது எச்சரிக்கை
பொது தளத்தில் பணியாற்ற வரும் பொழுது ,இவ்வாறு எதிர்ப்புக்கள் கிளம்பும் ,அதனை முன்கூட்டி அனுமானித்து அவற்றை தவிர்த்து சென்றிருந்தால் இந்த நிலை பிரான்ஸ் டிக் டாக் ராசனுக்கு ஏற்பட்டு இருக்காது .
பிரான்ஸ் டிக்டாக் ராசன் மிக சிறந்த அன்பான மனிதர் எனவும் ,அவரை தவறான வழியில் அவரை சிக்க வைத்து ,சிக்கலில் மாட்டி விட்டது ,லண்டனில் இருந்து வருகை தந்துள்ள கடை நடத்திய பெண் என்ற குற்ற சாட்டு பாரதூரமாக முன் வைக்க படுகிறது .
ஆதலால் அந்த லண்டன் பெண்ணுக்கு பெரும் தொகையில் பணம் கிடைத்தது எப்படி என்பதை, பிரிட்டன் வருமான துறை விசாரணைகளை மேற்கொண்டால் ,விடயம் தெரியவரும் என மக்கள் கருத்துக்கள் காணப்படுகின்றன .
குற்றம் சுமத்த பட்டுள்ள ராசன் லண்டன் பெண் ஆகியோர் எம்மோடு உங்கள் பக்க விடயங்கள் தெரிவிக்க விரும்பினால் எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள் .
சேவை மைந்தன் பிரான்ஸ் டிக் டாக் ராசன்
சேவை மைந்தன் பிரான்ஸ் டிக் டாக் ராசன் மீது இவ்விதமான எதிர்ப்பு கிளம்பிட காரணம் என்ன என்பதை ,அவரது உற்ற நெருங்கிய விசிறிகள் ,விசிறி விடயத்தை கண்டறிக .
பொறிக்குள் ராசனை சிக்கவைத்து ,இன்று இந்த தலைகுனிவை அவருக்கு ஏற்படுத்தியது யார் என்பதை ,ராசனுடன் பயணிக்கும் ,விசிறிகள் ஆராய வேண்டும் என்பதே நமது அவா .
வவுனியாவில் பாடசாலை ஒன்றில் இருந்து மோட்டார் குண்டுகள் மீட்பு
வவுனியாவில் பாடசாலை ஒன்றில் இருந்து மோட்டார் குண்டுகள் மீட்பு
வவுனியா, மடுகந்தை தேசிய பாடசாலையில் இருந்து வெடிக்காத நிலையில் 7 மோட்டார் குண்டுகள் நேற்று (11) மீட்கப்பட்டுள்ளதாக மடுகந்தைப் பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, மடுகந்தை தேசிய பாடசாலையில் இருந்த குப்பை குழியை துப்பரவு செய்த போது குறித்த குழிக்குள் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து பாடசாலை நிர்வாகத்தால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார், விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் அப் பகுதியில் இருந்து 7 மோட்டார் குண்டுகளை மீட்டனர்.
மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகளை வவுனியா நீதிமன்றின் அனுமதியுடன் அழிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
வவுனியாவில் மோட்டர் சைக்கிள் திருட்டு
வவுனியாவில் மோட்டர் சைக்கிள் திருட்டு
வவுனியா, புதிய பேரூந்து நிலையம் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று தெரிவித்தனர்.
வவுனியா, புதிய பேரூந்து நிலையம் அருகில் மோட்டர் சைக்கிள் ஒன்றை இரவு நிறுத்திவிட்டு கொழும்பு பயணித்த ஒருவர் மறுநாள் பகல் வந்து பார்த்த போது அவரது மோட்டர் சைக்கிள் விட்ட இடத்தில் காணப்படவில்லை.
அப் பகுதியில் தேடிய போதும் மோட்டர் சைக்கிள் கிடைக்காத நிலையில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாடு தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, மோட்டர் சைக்கிள்களை பொது இடங்களில், வீதியோரங்களில் நிறுத்தி விட்டு தூர பயணங்களை மேற்கொள்ளாது அதனை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி விட்டு செல்லுமாறு வவுனியா பொலிசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.



















































