Posted in Uncategorized இணையங்கள்

சிறிதரன்

சிறிதரன்

தமிழ் கட்சிகள் ஒன்று சேரவேண்டும் சிறிதரன்
Posted in இலங்கை செய்திகள்

தமிழ் கட்சிகள் ஒன்று சேரவேண்டும் சிறிதரன்

தமிழ் கட்சிகள் ஒன்று சேரவேண்டும் சிறிதரன்

தமிழ் கட்சிகள் ஒன்று சேரவேண்டும் சிறிதரன் எம்பி அவர்கள் இப்படி உரைத்துள்ளார் .

முள்ளி வாய்க்கால் படுகொலை

முள்ளி வாய்க்கால் படுகொலை இடம்பெற்று 16 வருடங்கள் கடக்கிற பொழுது இதுவரை பாதிக்க பட்ட மக்களுக்கு தீர்வை இவர்கள் வழங்கவில்லை .

பாராளுமன்றத்தில் எட்டு உறுப்பினர்கள் வெற்றி பெற்றுளளர்கள் ,அவர்கள் எவரும் தமிழருக்கு எதுவித நல திட்டங்களையும் மேற் கொள்ளவில்லை .

மீளவும் ஒன்று சேர வேண்டும்

இவ்வாறான சூழ் நிலையில் ஒன்றாக இருந்து பிரிந்து சென்ற இவர்கள் மீளவும் ஒன்று சேர வேண்டும் என்கின்ற இந்த கூற்று மிக பெரும் அபத்தமான ஏமாற்று நாடகம் என்பது அம்பல படுகிறது .

தமிழர்களினால் ஒதுக்க பட்டு புறம் தள்ள பட்டவர்களை மீளவும் ஒன்றிணைக்க வேண்டும் என்கின்ற ஸ்ரீதரன் இந்த கூற்று காலம் பிந்திய சுடு காட்டு சிந்தனையாக உள்ளது .

ஆக மக்கள் மதிப்பை பெற்று விளங்கும் ஸ்ரீதரன் இந்த கருத்தை தமிழர்கள் ஏற்று கொள்ளவில்லை .

இது ஸ்ரீதரன் மீது மக்கள் வைத்திருக்கும் நன் மதிப்பை சீர்குலைக்கும் செயலக பார்க்க முடிகிறது .

மீளவும் ஒருமுறை தமிழ் தேசியத்தின் பெயரால் மக்களை ஏமாற்ற நடக்கும் அரசியல் சதுரங்க ஆட்டம் என்பது புலனாகிறது

காணி அபகரிப்பு வர்த்தமானி கேள்வி கேட்ட சிறிதரன்
Posted in இலங்கை செய்திகள்

காணி அபகரிப்பு கேள்விகேட்ட சிறிதரன்

காணி அபகரிப்பு கேள்விகேட்ட சிறிதரன்

காணி அபகரிப்பு கேள்விகேட்ட சிறிதரன் வடக்கு, கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன என நாடாளுமன்றில் சிறீதரன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள 5 ஆயிரத்து 700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக,

2025.03.28 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் உள்நோக்கம் என்ன என்பதை, கமத்தொழில், கால்நடை வளங்கள்,

காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த சபைக்குப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்,

என்று நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

இன்றைய சபை அமர்வில், நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27.2 இன் கீழ், நாடாளுமன்றக் குழுத் தலைவராக, துறைசார் அமைச்சரிடம்,

வாய்மொழி மூல விடைக்கான வினாக்களை முன்வைக்கும்போதே இந்த விடயம் குறித்து சிறீதரன் எம்.பி. கேள்வி எழுப்பினார். இதன்போது அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

“குறித்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் கோரப்பட்டுள்ள காணிகள் என்ன தேவைக்காகக் கோரப்பட்டுள்ளன என்பதையும்,

6000 ஏக்கர் வரையான காணிகளை அவசரமாகச் சுவீகரிப்பதற்கான காரணம் என்ன என்பதையும் அமைச்சர் இந்தச் சபைக்கு அறிவிக்க வேண்டும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நீண்டகாலம் நடைபெற்ற யுத்தம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும், உறவினர் நண்பர்களின் வீடுகளிலும் வாழும்போது

அவர்களது காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்காமல், மக்களின் காணிகளை சுவீகரிக்கும் இந்த வர்த்தமானி அறிவித்தலின் உள்நோக்கம் என்ன என்பதையும்,

தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நீண்டகால யுத்தம் காரணமாக அவர்களது காணி ஆவணங்கள் தவறவிடப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலகங்கள் தெரிவிக்கும் நிலையில்,

இந்தப் புதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் காணி உரிமையை உறுதிப்படுத்துமாறு எவ்வாறு கோர முடியும் என்பதையும் அமைச்சர் இந்த உயரிய சபைக்கு அறிவிக்க வேண்டும்.” என்று வலியுறுத்தினார்.

நாடாளுமன்றக் குழுத் தலைவர்களால் கேட்கப்படும் வாய்மொழி மூல வினாக்களுக்கு, துறைசார் அமைச்சர் உரிய காலத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர் காணி அபகரிப்பு இரகசியமாக ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் வர்த்தமானி கடந்த வாரம் வெளியாகி இருந்தது.

வடக்கு மாகாணத்தில் மருதங்கேணி முதல் முள்ளிவாய்க்கால் வரை யாழ்ப்பாணம் மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம் ஆகியவற்றின்

பெரும்பாலும் கடற்கரையோரப் பிரதேசங்களை அண்டி,5 ஆயிரத்து 940 ஏக்கர் நிலம் அரச உடமையாக்கப்படுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் காணி ஆணையாளர் நாயகத்தால் சத்தம் சந்தடியின்றி வெளியிடப்பட்டுள்ளது.

அரசு அடையாளப்படுத்திய காணிகளை எதிர்வரும் முன்று மாதங்களுக்குள் ஒருவரும் உரிமை கோராவிட்டால் அவை அரச காணிகளாக பிரகடனப்படுத்தப்படும் வர்த்தமானி அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலேயே இன்று நடந்த பாராளுமன்ற அமர்வில் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கேள்வி எழுப்பி இருந்தார்.

திட்டமிடப்பட்ட செயலாக இந்த காணி அபகரிப்பு இரகசிய வர்த்தமானி வெளிவந்தமை அதிர்ச்சிக்குரியதாகும்.

சிங்கள பெளத்த பேரினவாதம் தமிழர்கள் நிலைகளை வளைத்து அதனை ஏப்பமிட துடிப்பதை இந்த காணி அபகரிப்பு விடயம் மீளவும் எடுத்துக் காட்டுகிறது.

கேதீஸ்வரனுக்கு ஆதரவாக சிறிதரன் பேச்சு
Posted in இலங்கை செய்திகள்

கேதீஸ்வரனுக்கு ஆதரவாக சிறிதரன் பேச்சு

கேதீஸ்வரனுக்கு ஆதரவாக சிறிதரன் பேச்சு

கேதீஸ்வரனுக்கு ஆதரவாக சிறிதரன் பேச்சு ,பாரளுமன்றில் அமைந்துள்ளது ,பாரளுமன்றில் பேசிய சிறிதரன் அவர்கள் இவ்வாறு உரைத்துள்ளார் .

சாவகச்சேரி மருத்துவமனைக்கு மத்திய அரசு எவ்வாறு ஒரு மருத்துவ பொறுப்பதிகாரியை நியமிக்கும் முடியும் என கேள்வி எழுப்பினார் .

வீடியோ பார்க்க இதில் அழுத்துங்கள்

அது தவறு என்பதாகும் ,சட்ட அத்துமீறல் இடம் பெற்றுள்ளதாக ஸ்ரீதரன் பேச்சு இப்படி சுட்டி காட்டுகிறது .

மாநகர சபைக்கு என அதிகார பகிர்வு

மாநகர சபைக்கு என அதிகார பகிர்வு காணப்படுகிறது . அதன் அடிப்படையில் அந்த பிராந்திய சுகாதார அமைச்சரே அதன் பிராந்தியத்திற்கு உரியவரை தெரிவு செய்யவேண்டும் எனப்படுகிறது .என்பதாக அவர் பேச்சு அறிவிக்கிறது .

இரண்டாவதாக மருத்துவர் கேதீஸ்வரன் மீது வைக்க பட்ட போதைவஸ்து மாத்திரை விற்பனை என்பது விசாரிக்க பட வேண்டும் என்கிறார் .ஸ்ரீதரன் .

போதைவஸ்து மாத்திரை தொடர்பாக பேச படவில்லை ,சாவகச்சேரி மருத்துவமனை ஊழல் மோசடிகள் தொடர்பாக பேச பட வேண்டும் ,ஆனால் அதனை ஸ்ரீதரன் எடுத்து விளக்க மறுத்து விட்டார் .

ஊழல் வாதிகளை ஸ்ரீதரன் காப்பாற்றுகிறார்

ஊழல் வாதிகளை ஸ்ரீதரன் காப்பாற்றுகிறார் என மக்கள் இப்பொழுது சிறிதரன் மீது கோபத்தில் உறைந்துள்ளனர் .

ஊழல்வாதிகளைம் காப்பாற்ற ஸ்ரீதரன் முயல்வதாக பல மக்கள் சமூக ஊடகங்களில் பேசிகொண்டுள்ளனர் .

ஆக மொத்தம் பல நல்ல சேவைகளை புரிந்து வரும் ஐயா ஸ்ரீதரன் இந்த பாரளுமன்ற பேச்சு ,அவருக்கு எதிராக திசை திரும்பியுள்ளது ,அவரது ஒட்டு வங்கியை பாதிக்கும் என எதிர் பார்க்க படுகிறது .

full video

இந்தியத் துணைத் தூதுவருடன் சிறிதரன் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

இந்தியத் துணைத் தூதுவருடன் சிறிதரன் சந்திப்பு

இந்தியத் துணைத் தூதுவருடன் சிறிதரன் சந்திப்பு

இலங்கைக்கான யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் புதிய தூதுவராகப் பொறுப்பேற்றுள்ள ஸ்ரீ சாய்முரளியை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மரியாதை நிமித்தம் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, தமிழ் மக்களில் அரசியல் நலன்சார் விடயங்கள் மற்றும் சமகால நெருக்கடிகள் நிலைமைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டுள்ளது

தமிழரசு கட்சிக்குள் குழப்பம் குத்து வெட்டு ஆரம்பம் பறிபோகும் சிறிதரன் தலைவர் பதவி
Posted in இலங்கை செய்திகள்

தமிழரசு கட்சிக்குள் குழப்பம் குத்து வெட்டு ஆரம்பம் பறிபோகும் சிறிதரன் தலைவர் பதவி

தமிழரசு கட்சிக்குள் குழப்பம் குத்து வெட்டு ஆரம்பம் பறிபோகும் சிறிதரன் தலைவர் பதவி

தமிழரசு கட்சிக்குள் குழப்பம் குத்து வெட்டு ஆரம்பம் பறிபோகும் சிறிதரன் தலைவர் பதவி ,தமிழரசு கட்சியின் தலைவராக சுமந்திரன் துடிப்பதால் சிறிதரன் பதவியை தட்டி பறிக்க சுமந்திரன் நடவடிக்கை .

சட்டத்தரணி சுமந்திரன் சூத்து மாத்து

இலங்கை ஆளும் ஜனாதிபதியின் சட்டத்தரனியாக விளங்கி வரும் சுமந்திரன் ,இன்றைய புதிய தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவு செய்ய பட்ட ஸ்ரீதரனுக்கு எதிராக சூழ்ச்சிகளை செய்து வருகிறார் .

தானே தமிழ் மக்கள் தாதாவாக நினைத்து தமிழ் மக்கள் அரசியல் அபிலாஷைகளை குழிதோண்டி புதைத்து வரும் சுமந்திரன் ,தான் சட்டத்தரணி என்ற வகையில் தமிழரசு கட்சிக்கு எதிராக பாரிய சதி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார் .

தமிழரசு கட்சி மீள் தலைவர் தெரிவு

தமிழரசு கட்சிக்குள் மீள் தலைவர் தெரிவு இடம்பெற வேண்டும் என அந்த கட்சிக்குள் குழப்பங்கள் நிலவி வருவதால் ,மீள ஒரு தேர்தலை நடத்தி அதன் ஊடக தலைவரை தெரிவு செய்திட தயாராக உள்ளதாக ,இன்றைய தமிழரசு கட்சியின் புதிய தலைவர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார் .

நீதிமன்றத்தினால் வழங்க படும் அறிவுறுத்தல் மற்றும் அவர்களது மேற்பார்வையின் கீழ் ,மீள ஒரு தேர்தலை நடத்தி அதன் ஊடக கட்சியின் தலைவர் பதவியை தெரிவு செய்திட, தான் தயாராக உள்ளதாக சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்து பர .பரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

.இன்றைய இலங்கை செய்திகள் தலைப்பு செய்தி

இந்த விடயம் இன்றைய இலங்கை செய்திகளில் முதன்மை தலைப்பு செய்திகளாக இடம்பிடித்து தமிழரசு கட்சியின் உள்வீட்டு குழப்பத்தை , வெட்டு குத்தை அம்பல படுத்தியுள்ளது ..

வடகிழக்கு இணைந்த தீர்வே தமிழருக்கு வேண்டும் சிவஞானம் சிறிதரன் தெரிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

வடகிழக்கு இணைந்த தீர்வே தமிழருக்கு வேண்டும் சிவஞானம் சிறிதரன் தெரிவிப்பு

வடகிழக்கு இணைந்த தீர்வே தமிழருக்கு வேண்டும் சிவஞானம் சிறிதரன் தெரிவிப்பு

வடகிழக்கு இணைந்த தீர்வே தமிழருக்கு வேண்டும் என சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார் ,தலைவராக பதவி ஏற்றதன் பின்னர் சிவஞானம் சிறிதரன் இவ்வாறு தெரிவித்து தமிழர் விடுதலையின் முக்கியதத்துவத்தை எடுத்துரைத்தார் .

எமக்கு வடகிழக்கு இணைந்த தாயாக பகுதியே தமிழருக்கு அதிகம் பொருந்திய ஒன்றாக காணப்படும் என தமிழீழ விடுதலை புலிகள் தெரிவித்து, அந்த நிர்வாக அலகை கடை பிடித்து வந்தனர் .

அவ்வாறான நிலையில் ஒன்றிணைந்த இலங்கைக்குள் ,ஒன்றித்து வாழும் சம்ஸடி முறையிலான அதிகாரம் ,தமிழருக்கும் வேண்டும் என சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார் .

தமிழருக்கு வடகிழக்கு இணைந்த தீர்வை யார் தருகிறார்களோ அவர்களுக்கு எமது ஆதரவு வழங்க படும் என ,சிவஞானம் சிறிதரன் தெரிவித்து ,இப்பொழுதே சிங்கள கட்சிகளுக்கு போடு ஒன்றை போட்டுள்ளார் .

வீடியோ

தமிழர்களை ரணில் விக்கிரமசிங்கா சிறிதரன் காட்டம்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக சிறிதரன் நியமனம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் நியமிக்க பட்டுள்ளார்

இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பில் கே 184 வாக்குகளை பெற்று தனது வெற்றியை தேடி கொண்டார் .

சுமந்திரன் 137 வாக்குகளினால் பின் தள்ள பட்டுளளார் ,எனினும்ஸ்ரீதரன் தொடர்ந்து நீதியாக செயல் பட்டு சுமந்திரன் அனுமதிப்பாரா என்கின்ற கேள்வி எழுகிறது ,

இலங்கை தமிழரசு கட்சி இனியாவது சிறை பாதையில் பயணித்து மக்களுக்கு நல்வழி படுத்தும் என நம்புவோம் .

M.A.சுமந்திரன் – பெற்ற வாக்குகள் -137

சிறிதரன் பெற்ற வாக்குகள் -184

சி.யோகேஸ்வரன் பெற்ற வாக்குகள்-0

திருகோணமலை நகரமண்டபத்தில் இன்று 21ம் திகதி இடம் பெற்ற கூட்டத்தில் 327

பேர் கலந்து கொண்டு வாக்களிப்பில் கலந்துகொண்டனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக சிறிதரன்|தடுக்கும் சுமந்திரன்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக சிறிதரன்|தடுக்கும் சுமந்திரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக சிறிதரன்|தடுக்கும் சுமந்திரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக சிறிதரன் நியமிக்க படவேண்டும் என பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர் ,ஆனால் அதனை தடுக்கும் நகர்வில் சுமந்திரன் ஈடுபட்டுள்ளார் .

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்த இரா சம்பந்தன் மூப்பாகி விட்ட காரணத்தால் , தலைவர் ஒருவரை நியமிக்க வேண்டிய நெருக்கடியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சிக்கி உள்ளது .

தமிழீழ விடுதலை புலிகளினால் உருவாக்க பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு ,உலக தமிழ் மக்கள் மத்தியில் அதனால் நன்மதிப்பை பெற்றுள்ளது .

ஆனால் இடையில் நுழைந்த எம் ஏ சுமந்திரன் செயல் பாட்டினால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உடைந்து காணப்படுகிறது .

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக சிறிதரன்|தடுக்கும் சுமந்திரன்

இதே தமிழ் தேசிய கூட்டமைப்பில் சுமந்திரன் தொடர்ந்து நீடித்தால் கட்சி காணாமல் போகும் நிலை ஏற்படும் என மக்கள் தமது கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர் .

இவ்வாறான கால பகுதியில் கல்விமானாகவும் ,புத்தியீவியாகவும் விளங்கி வரும் பாராளுமன்ற உறுப்பினர் ,சிவஞானம் சிறிதரன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக பொறுப்பேற்கும் தகமை கொண்டவர் என மக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

கொழும்பின் முகவராக செயல் பட்டு தமிழ் தேசிய இலக்கை சிதைத்து ,ஒன்று பட்டு பணியாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைத்தலை குழப்பிய நபர்களில் சுமந்திரன் முதன்மை வைக்கிறார் .

அதனால் சுமந்திரனுக்கு எதிராக சகா உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர் .

சுமந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக அமர்த்த பட்டால் கூட்டமைப்பு என்கின்ற கட்சி காணாமல் போகும் என யோகேஸ்வரன் திறந்த மனதோடு தனது கருத்தை வெளியிட்டு ,ஸ்ரீதரனுக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளார் .

வீடியோ

தமிழர்களை ரணில் விக்கிரமசிங்கா சிறிதரன் காட்டம்
Posted in இலங்கை செய்திகள்

தமிழர்களை ரணில் விக்கிரமசிங்கா ஏமாற்றுகிறார் சிறிதரன் காட்டம்

தமிழர்களை ரணில் விக்கிரமசிங்கா ஏமாற்றுகிறார் சிறிதரன் காட்டம்

தமிழர்களை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா

ஏமாற்றி வருவதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் காட்டமாக தெரிவித்துள்ளார் .

திறந்த மனதோடு சிங்கள ஆட்சியாளார்கள் பேச தயாராக இல்லை என சிறிதரன் தெரிவித்துள்ளார் .

இலங்கையில் புரையோடி போயுள்ள தமிழர் அரசியல் பிரச்சனைக்கு தீர்வினை கண்டு ,ஐக்கிய பட்ட இலங்கையை கட்டி எழுப்ப வீழ்ந்து போன பொருளாதாரத்தை நிமிர்த்திட யாரும் தயாராக இல்லை .

லஞ்சம் ஊழல் மோசடி ஏமாற்றில் ஊறிபோயுள்ள இலங்கை இதில் இருந்து விடுபட முடியாது உள்ளது என்பது அவரது கருத்தாக உள்ளது .

வீடியோ

சிறிதரன்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் எம்பி சிறிதரன் முழக்கம்

இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் எம்பி சிறிதரன் முழக்கம்

இலங்கை புரிந்த தமிழின படுகொலைக்கு இலங்கையை சர்வதேச நீதிமன்றி முன்னிலை படுத்த வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் முழங்கியுள்ளார் .

முல்லைதீவு மாவட்டத்த நீதிபதி சற்குணராஜா நாட்டை விட்டு மிரட்ட பட்டு துரதியடிக்க பட்ட விடயம் தொடர்பில், பாரளுமன்றில் உரையாற்றும் பொழுதே இந்த விடயத்தை முன் வைத்தார் .

இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் எம்பி சிறிதரன் முழக்கம்

ஆண்டுகளாக ஆண்டு வரும் ஆளும் சிங்கள பவுத்த இனவாதிகள் ,தமது நலன்கள் கருதி சட்டங்களை மாற்றுகள் ,தமிழ் நீதிபதிகளை மிரட்டி அடக்கி ஆண்டு வருகின்றனர் .

இது ரணில் அரசாங்கத்தின் வாங்குறோத்து நிலையை காட்டுகிறது .எனவே தமிழர்களை புறம்தள்ளி நசுக்கி ஒடுக்குவதன் மூலம் இலங்கை சுதந்திரமும் நின்மதியாக வாழமுடியாது என இடித்து கூறினார் .

வீடியோ

கமல் சிறிதரன் திடீர் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

கமல் சிறிதரன் திடீர் சந்திப்பு

கமல் சிறிதரன் திடீர் சந்திப்பு

நடிகர் கமல் மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அவர்கள், தமிழகத்தில் சந்தித்து பேசியுள்ளார் .

இந்த சந்திப்பில் , தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிப்பு மற்றும் ,தமிழர் அடிப்படை பிரச்சனைகள் தொடர்பாக பேச பட்டதாக தெரிவிக்க படுகிறது .

தமிழ் மக்களின் நன்மதிப்பை பெற்றவராக ,இலங்கை தமிழ் அரசியல் வாதியாக ஸ்ரீதரன் முன்னிலை வகிப்பது குறிப்பிட தக்கது .

Posted in இலங்கை செய்திகள்

இனப்பிரச்சனை தீர்வு தொடர்பில் ரணிலுடன் பேச கூட்டமைப்பு தயார் சிறிதரன் எம்பி

இனப்பிரச்சனை தீர்வு தொடர்பில் ரணிலுடன் பேச கூட்டமைப்பு தயார் சிறிதரன் எம்பி

இலங்கை ,கிளிநொச்சி ; தமிழ்த் தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவுடனும் பேசத்தயார் என்கிறார் சிறீதரன் எம்.பி

தமிழ்த் தேசிய இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவுடனும் பேசத்தயாராகவே நாங்கள் இருக்கிறோம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கிளிநொச்சி இராமநாதபுரம் வட்டாரத்தில் மக்களுடனான சந்திப்பு நடைபெற்றது குறித்த சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இனப்பிரச்சனை தீர்வு தொடர்பில் ரணிலுடன் பேச கூட்டமைப்பு தயார் சிறிதரன் எம்பி

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் இந்த மண்ணிலே புரையோடிப்போயிருக்கிற இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்த நாட்டின் ஜனாதிபதியாக யார் இருந்தாலும் நாங்கள் பேசுவோம் அந்த வகையில் ரணில் விக்கிரமசிங்கவோடும் நாம் பேசுவோம்.

ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்சவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 19 தடவைகள் பேசியிருக்கிறோம் கோத்தபாய ராஜபக்ஷவுடனும் ஒரு தடவை

பேசியிருக்கிறோம் இவ்வாறு இந்த நாட்டில் யார் யார் எல்லாம் ஜனாதிபதியாக இருந்திருக்கிறார்களோ அவர்களுடன் எல்லாம் தமிழர் தரப்பு பேச்சுக்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்

ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 3 ஆம் திகதியன்று பாராளுமன்றில் தனது அக்கிராசன உரையை நிகழ்த்தவுள்ளார் இவர் தனது அக்கிராசன உரையில் புரையோடிப்போயிருக்கிற இனப்பிரச்சினை தொடர்பில் கருத்து தெரிவிப்பாரா?

அல்லது முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச போன்று அனுராதபுரத்தில் பதவியேற்ற போதும் சரி தனது அக்கிராசன உரையிலும் சரி மக்களால்

விரட்டியடிக்கப்படும் வரை தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் ஒரு வார்த்தை கூட பேசாதது போன்று இவரும் செயற்படுவாரா? எனும் சந்தேகம் இப்போது எழுந்திருக்கிறது

40 வருடங்களுக்கு மேலான அரசியல் அனுபவத்தை கொண்டுள்ள ஜனாதிபதி இந்த நாடு இப்படி பொருளாதார ரீதியில் அதளபாதாளத்திற்கு போவதற்கு பிரதான காரணமாக இருந்தது ஒரு இனத்தின் மீது நடைபெற்ற போர்தான் என்பதை புரிந்து

வைத்திருப்பார் எம் மீது நடைபெற்ற இனவழிப்பின் பங்காளியாக இருந்தவர் எமது விடுதலைப் போராட்டத்தை சூழ்ச்சியால் பிரித்த ரணில் விக்கிரமசிங்க நாட்டின்

பொருளாதார நிலையை சீர் செய்ய வேண்டும் என்றால் முதலில் இனப் பிரச்சினையை தீர்க்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்

குறித்த சந்திப்பில் சமகால அரசியல் தொடர்பிலும் பொருளாதார பிரச்சினை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்

அவர்களுடன்
வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராஜாவும் கலந்து கொண்டிருந்தார்.

    Posted in இலங்கை செய்திகள்

    கோட்டா மீது சிறிதரன் பாய்ச்சல்

    கோட்டா மீது சிறிதரன் பாய்ச்சல்

    எரிபொருள் தட்டுப்பாடு என்பது இந்த அரசாங்கத்தின் இயலாமையையும், வலுக்குன்றிய நிலையையும், திட்டமிடப்படாத பொருளாதார சிந்தனைகளையும்

    இராணுவ சிந்தனைகளோடு மட்டுமிருக்கின்ற கோட்டபாயவின் தோற்றுப்போன மனநிலையை இந்த உலகில் காட்டி நிற்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

    கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (2) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

    தொடர்ந்து தெரிவித்த அவர்,

    அரசாங்கத்திடமிருந்து எரிபொருள் கிடைக்காத காரணத்தால் கிளிநொச்சியில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்பதை நாங்கள் பார்க்கின்றோம்.

    இது அவர்களைப் பொறுத்தவரையில் பொருளாதாரத்தில் மற்றுமொரு அடியாக உள்ளது.

    எனவே,இந்த அரசாங்கம் தோல்வியடைந்த அரசாங்கமாகும். அவர்கள் தமிழ், சிங்கள மக்களை வதைத்து அதன் ஊடாக தமது குடும்ப நலனை கொண்டிருக்கின்ற ஒரு அரசாங்கமாக உள்ளது.

    தனியார் ஊடாக உரத்தினை இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளதாக அரசாங்கம் சொல்கின்றபொழுதிலும், வடக்கில் தமிழ் மக்கள் உரத்தினை பெற்றுக்கொள்ளவோ

    அல்லது காணவோ முடியாத நிலையிலேயே உள்ளனர். ஆகவே இது மிகப்பெரிய பின்னடைவையும், இந்த மக்களுக்கு ஏமாற்றத்தையும் கொடுத்திருக்கின்றது என்றார்

      பாடசாலை மதிலை
      Posted in இலங்கை செய்திகள்

      பாடசாலை மதிலை திறந்து வைத்தார் – சிறிதரன் எம்பி photo

      பாடசாலை மதிலை திறந்து வைத்தார் – சிறிதரன் எம்பி

      வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் மதிலினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற

      உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் இன்றைய தினம் திறந்து வைத்தார்.


      நாடாளுமன்ற உறுப்பினரின் 2021 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் ஆறு இலட்சம் ரூபாய் செலவில் குறித்த மதில் அமைக்கப்பட்டது.


      பாடசாலையின் முதல்வர் பங்கயற்செல்வன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற

      உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுடன் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர்

      சிவமோகன் கரைச்சி கோட்டக் கல்வி அலுவலர் தர்மரத்தினம் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்

      சிறீஸ்குமார் ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்

        சிறிதரன்
        Posted in Uncategorized

        துப்பாக்கி முனையில் சிந்திக்கின்ற கோட்டா – பொங்கிய சிறிதரன் video

        துப்பாக்கி முனையில் சிந்திக்கின்ற கோட்டா – பொங்கிய சிறிதரன்

        பொருளாதாரத்தை கட்டி வளர்க்கின்ற ஒரு நல்லெண்ணம் பொருந்திய ஜனாதிபதி இந்நாட்டில்

        இல்லை எவ் விடயத்தையும் துப்பாக்கி முனையில் சிந்திக்கின்ற ஜனாதிபதியே

        காணப்படுகின்றார்- சி.சிறீதரன்

        இதில் அழுத்தி காணொளி பாருங்கள்

        https://www.facebook.com/ImShritharan/videos/426069292549340/

          Posted in Uncategorized

          பண்டத்தரிப்பு வைத்தியசாலையை தரம் உயர்த்தூண்கள் – சிறிதரன் எம்பி முழக்கம்

          பண்டத்தரிப்பு வைத்தியசாலையை தரம் உயர்த்தூண்கள் – சிறிதரன் எம்பி முழக்கம்

          யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையை தரம் உயர்த்தினால் குறித்த பகுதி மக்கள் தூர இடங்களுக்கு வைத்திய சேவையை பெற செல்லுவதை குறைக்கலாம்: சிறீதரன் எம்.பி!


          யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையை தரம் உயர்த்தினால் குறித்த பகுதி மக்கள் தூர இடங்களுக்கு வைத்திய சேவையை பெற செல்லுவதை குறைக்கலாம் என தமிழ்

          தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
          பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலைக்கு இன்றையதினம் விஜயம் செய்தபோதே அவர்

          மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
          அவர் மேலும் தெரிவிக்கையில்,


          பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையில் மாதாந்தம் 3500க்கும் மேற்பட்ட தொற்றா நோயாளர்கள் மற்றும் ஏனைய நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அடிப்படை

          வசதிகள் இருந்தும் ஒரு வைத்தியரும் மற்றொரு பல் வைத்தியரும் அவருடன் இணைந்த 4 ஊழியர்களுடனேயே வைத்தியசாலை இயங்கிவருகின்றது.


          வெளிநோயாளர் பிரிவு இயங்கி வந்தாலும் கூட ஆளணி பற்றாக்குறை காரணமாக விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற முடியாத நிலைமை காணப்படுகின்றது.


          ஐந்து ஏக்கர் காணி பரப்பிலே பொதுமக்களின் ஒத்துழைப்புடன் இந்த வைத்தியசாலை இயங்கி வருகின்றது.


          வைத்தியசாலை பாவனைக்காக பொதுமக்களால் ஒரு முச்சக்கர வண்டி வழங்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறான அடிப்படை வசதிகள் இருந்தும் கூட ஆளணி பற்றாக்குறை காரணமாக வைத்தியசாலை முழுமையான சேவையை பெற முடியாத நிலைமை காணப்படுகின்றது.


          தரம் இரண்டிலிருந்து இந்த வைத்தியசாலை தரம் ஒன்றிற்கு மாற்றப்பட வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இவர்கள் வைத்திய சேவைகளை பெறுவதற்காக அதிக தூரம் பயணித்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய நிலையில்,

          அருகிலேயே இந்த வைத்தியசாலையை தரம் மாற்றினால் ஆளணியும் உயர்வதுடன்
          இந்த பகுதி மக்கள் இங்கேயே சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.


          உரிய தரப்புகளுடன் பேசி இதற்கான நடவடிக்கைகளை நாம் எடுப்போம் என்றார்.
          அத்துடன் மாதகல் சென் தோமஸ் ரோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலை பண்டத்தரிப்பு

          பெண்கள் உயர்தரப் பாடசாலை மற்றும் பண்டத்தரிப்பு தேவாலயம் உள்ளிட்ட இடங்களையும் பார்வையிட்டதுடன் பாடசாலைகளின் தேவைகள் மற்றும் தேவாலயத்தின் தேவைகள்

          தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களுக்கு பாடசாலையின் முதல்வர்களாலும் தேவாலயத்தின் அருட்தந்தையினாலும் விளக்கமளிக்கப்பட்டது.


          நாடாளுமன்ற உறுப்பினரின் குறித்த விஜயத்தின் போது மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர்

          ஜோன் ஜிப்ரிக்கோ, நாடாளுமன்ற உறுப்பினரின் நல்லூர் பிரதேச இணைப்பாளர் பி.துஸ்யந்தன் மற்றும் கட்சி உறுப்பினர்களும் வருகை தந்திருந்தனர்.

            Posted in இலங்கை செய்திகள்

            புத்தி கெட்ட மனிதரெல்லாம்-அருமை சிறிதரன் எம்பி உருக்கம்

            புத்தி கெட்ட மனிதரெல்லாம்” எனும் மிக அருமையான திரைக்கதை மூலம் சிறந்த நடிப்பினை வெளிப்படுத்திய எம் ஈழத்து இளம் கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்


            ‘புத்தி கெட்ட மனிதரெல்லாம்” எனும் அற்புதமான முழு நீள திரைப்படத்தினை இயக்கிய poovan media குழும கலைஞர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்


            கதைக்களத்தை சிறப்பான முறையில் உருவாக்கிய இயக்குனர் சிவராஜ் அவர்களுக்கு அவர்தம் குழாத்தினருக்கு மிக இளம் வயதில் சாதிக்க முடியும் என்பதை சாதித்து காட்டிய சாதனையாளர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்


            ஈழத்து திரைப்படங்கள் மேலும் வளர்ச்சி நிலையை அடையவேண்டும் இப்படியாக ஈழத்து கலைஞர்களின் படைப்புகள் மேலும் வரவேண்டும் இவர்களின் முயற்சி வெற்றியடைய என் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்.


            தமிழர்களின் கலை வரலாற்றில் விடுதலைப்புலிகளின் காலம் பொற்காலம் போர் முடிந்ததன் பின்னரான காலப்பகுதியில் கலைஞர்கள் தங்களின் படைப்புக்களுக்கு உரித்தான அந்தஸ்து

            கிடைப்பதில்லை என்பதான ஒரு குற்றச்சாட்டு கலைஞர்களால் முன்வைக்கப்பட்டிருக்கிறது உண்மை தான்.


            எம்மவர்கள் இந்த மண்ணில் இருந்தபோது கலைகளையும், கலைஞர்களையும் வளர்க்க விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக்கழகம் என்ற பிரிவு உருவாக்கப்பட்டு அதனூடாக பாரம்பரிய கலைகளையும், பண்பாட்டையும் வளர்த்திருந்தார்கள்.


            கலைஞர்களும் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆற்றிய பங்கு மகத்தானது. தங்களின் கலைப் படைப்புக்களால் போராட்டத்தின் பக்கம் மக்களை எழுச்சி கொள்ள வைத்தவர்கள் என்றால் மிகையில்லை.


            ஈழத்து திரைப்படங்கள் விடுதலைப் புலிகளின் காலத்தில் உச்ச நிலை பெற்றிருந்தது எம்மவர்களின் கலை வெளிப்பாட்டின்பால் அந்நிலைக்கு ஈழத்து முழுநீள திரைப்படங்கள் வளர்ச்சி பெற வேண்டும் வாழ்த்துக்கள்

              Posted in இலங்கை செய்திகள்

              மாவீரர் நாளினை மதிக்காத வரை – இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படாது-சிறிதரன்


              மாவீரர் நாளினை மதிக்காத வரை – இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படாது

              இலங்கையில் இறந்த மாவீரர்களை நினைவு கூற இலங்கை ஆளும் அரசுகள் தடை விதித்து

              வருகின்றன இவ்வாறு இவர்கள் செல்வார்கள் ஆயின் நாட்டில் எவ்வாறு நல்லிணக்கத்தை

              ஏற்படுத்த முடியும் என


              சிறிதரன் எம்பி கேள்வி எழுப்பியுள்ளார் .