மகன் இறந்து நான்கு நாளில் தாய் மரணம்
மாரடைப்பு காரணமாக, மகன் இறந்து நான்கு நாள்களில் அவரது தாய் உயிரிழந்த சம்பவம்
மாத்தளை- பலாபத்வல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் 41 வயதான கிர்ஷாந்தனும் அவரது தாயாரான 59 வயதான பொன்செல்வி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகனது இறப்பையடுத்து, குறித்த தாய் திடீரென நோய்வாய்ப்பட்டு நேற்று உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் மாத்தளை பிரதேச இளைஞர்கள் மத்தியில் பிரபல்யமானவர் என்றும்
பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
தாய் மற்றும் மகனது இறுதிக்கிரியைகள் இன்று மாத்தளை- வாவன்னாவத்த பொது மையானத்தில் இடம்பெறவுள்ளது.