எதற்கடா உனக்கு திருமணம்
சீதனத்து கொடுமைகளை
சினத்தோடு உரைக்க வந்தால்
மேதினத்து மேனிகளோ
மோதி இன்றி வீழ்கின்றார்
பானை வயிறு உடல் தாங்கி
பாதி வழி அலைகின்ற
வேலையில்லா வேந்தர்களின்
வேண்டுதல் இதுவாம்
உதடெல்லாம் விஷம் வைத்து
ஊறுகின்ற பாம்பே
முதுகெலும்பு இன்றி
முன்னே கேட்க்கிறான்
உள்ளான் பானையிலே
ஊற்றியே வைக்கிறான்
இல்லாதான் வேண்டியே
இல்லறத்தில் கூடுறான்
உன் இச்சை தீர்ப்பதற்கு
உனக்கு வரி செலுத்தி
நடக்கிற திருமணம்
நாயே எதற்கு …?
வன்னி மைந்தன்
ஆக்கம் 12-09-2021
வன்னி மைந்தன் கவிதைகள்