தெரிந்து செய்
ஆடி பறக்கும் பட்டத்திற்கு
ஆணவம் கூடாது
ஆடும் காற்று இல்லை என்றால்
அது வானில் ஏறாது
நூலை பிடித்தும் பயனில்லை
நுணுக்கங்கள் புரிந்து விடு
மேல் என நினைத்து ஆடி விடும்
மேன்மை குறைத்து விடு
குளிர்ச்சி பொழிவது மலைகள் தானே
குமரா புரிந்து விடு
குடி நீரை தருவது அவைதானே
குணத்தினை புரிந்து விடு
நிலமும் உயிரும் வாழ்ந்துவிட
நீரே மூலதனம் -இந்த
நிலைகள் அறிந்திடா வாழ்ந்து விடின்
நீயோர் மூடத்தனம்
உயரம் என்றே நினைத்து
உள்ளம் மகிழாதே – உன்
உண்மை தெரிந்தால்
ஊரே மிதிக்கும் நிலைகள் மறவாதே
வானை முட்டும் மரங்கள் அழிப்பின்
வாழ்வு வாடி விடும்
வாழும் போதே வாழ்ந்திட பழகு
வாழ்வு உயர்ந்து விடும்
வன்னி மைந்தன் – (ஜெகன்)
ஆக்கம் – 08-03-2021
வன்னி மைந்தன் கவிதைகள்