இலங்கையில் கொரோனா – மேலும் இருவர் மரணம்
இலங்கையில் கொரோனா வைரசு தொற்றின் காரணமாக இன்று மேலும் இருவர் மரணமாகியுள்ளனர் என்று சுகாதார சேவைகள்
பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொவிட் 19 தொற்றுக்குள்ளானவரகள்; என்ற ரீதியில் இனங்காணப்பட்ட பின்னர் முல்லேரிய வைத்தியசாலையில்
சிகிச்சை பெற்றுவந்த இரண்டு நோயாளிகள் அந்த வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதுடன் அது தொடர்பான விபரங்கள் பின்வருமாறு:
- கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 54 வயதான ஆண் நபராவார். மரணத்திற்கான காரணம் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயுடன் கொவிட் 19 வைரசு தொற்றுக்குள்ளானமை என
- தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மீகொட பிரதேசத்தைச்சேர்ந்த 45 வயதான ஆண் நபராவார் மரணத்திற்கான காரணம் கொவிட்19 வைரசு தொற்று
- நிமோனியாயுடன் இரண்டாம் நிலை பாக்டீரியா தொற்றுக்குள்ளானமையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இலங்கையில் பதிவான கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில் மரணமடைந்தோரின்
எண்ணிக்கை 48 ஆகுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன உறுதி செய்துள்ளார்.