கட்டடம் இடிந்து வீழ்ந்து குழந்தை பலி
கண்டி – பூவெலிகட பிரதேசத்தில் 5 மாடி கட்டடமொன்று உடைந்து
வீழந்ததுள்ளதால், குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று அதிகாலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதுடன், இதன் போது ஒன்றரை
மாத குழந்தையொன்று உள்ளிட்ட மூவர் அனர்த்த மீட்பு குழுவினரால்,
மீட்கப்பட்டு கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே இந்த குழந்தை உயிரிழந்துள்ளது.
இதன்போது, கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்த மேலும் இருவரைக் காணவில்லை
என்றும் இவர்களை மீட்கும் பணிகளில் இராணுவத்தினரும் பொலிஸாரும் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.