கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 596ஆக அதிகரித்துள்ளது.;.
இன்றைய தினத்தில் (2020.04.28) இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி
உறுதி செய்யப்பட்ட புதிதாக 8 நோயளர்கள் பதிவாகியிருப்பதாக சுகாதார
சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க
கொரோனா தொற்று பரவுவதைதடுக்கும் கொவிட் 19 தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில் உறுதி செய்தார்.
இந்த நோயாளர்களில் 5 பேர் கடற்படை அங்கத்தவர்கள் ஆவதுடன் மூவர் புனானி தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில்
தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்தவர்களாவர். இவர்களுள் 134 பேர் குணமடைந்து
வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர் என்றும் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மேலும் கூறினார்.