9 ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிப்பு
தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதால், மேல் மாகாணத்தில்
பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு
எதிர்வரும் 9ஆம் திகதி காலை 5 மணிவரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாளை காலை 5 மணி தொடக்கம் எதிர்வரும் 9ஆம் திகதி வரை,
இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட
பிரதேசங்களிலும் குருநாகல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களிலும்
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதென, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.