68 மில்லியன் ரூபா கஞ்சா மீட்பு
நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம்-நறுவிலிக்குளம் கடற்கரை
பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 68 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப் பொதிகளை நேற்று முன்தினம் (21) வங்காலைக் கடற்படையினர் மீட்டுள்ளனர்.
கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையிலேயே இக்கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது சுமார் 228 கிலோகிராம் நிறை கொண்ட கேரள கஞ்சாப் பொதிகள் மீட் கப்பட்டுள்ளதாகவும், எனினும் இது தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.