65 போலி நாணயத்தாள்களுடன் பட்டதாரி கைது
5,000 ரூபாய் பெறுமதியான 65 போலி நாணயத்தாள்களுடன் வெளிவாரி பட்டதாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பியகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் 2021 ஆம் ஆண்டு ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தில் வெளிவிவகார கல்விக்காக பதிவு செய்யப்பட்டவர் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
28 வயதான சந்தேக நபர் பொல்பிதிகம ஹட்பொகுன பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.