54 பேர் காவல்துறையால் திடீர் கைது
தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில்
54 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமை
உள்ளிட்ட தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமையாலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம்
இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 1,794 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.