53 தலீபான்கள் கொன்று குவிப்பு
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 53 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானில் படைகள் அதிரடி – 53 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு
ஆப்கானிஸ்தான் நாட்டில் நேற்றுமுன்தினம் காந்தஹார் மாகாணத்தின் அர்கண்டாப் மற்றும் டான்ட் மாவட்டங்களில்
பாதுகாப்பு படைகளின் சோதனைச்சாவடிகளை தாக்க தலீபான் பயங்கரவாதிகள் முற்றுகையிட்டனர். ஆனால் பாதுகாப்பு
படையினர் சுதாரித்துக் கொண்டு அவர்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தினர்.
இதில் 31 தலீபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். தலீபான்களின் ஆயுதங்களும், வெடிபொருட்களும் அழிக்கப்பட்டன.