20 கோடி மோசடி செய்த தம்பதி

இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
Spread the love

20 கோடி மோசடி செய்த தம்பதி

20 கோடிக்கு மேல் மோசடி செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கணவன்-மனைவியை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீர்கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் 48 மற்றும் 43 வயதுடைய தம்பதியினரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு குரன பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான தம்பதி நடத்தும் வர்த்தக நிலையமொன்றில் பெருமளவிலான பணத்தை வைப்பிலிட்ட ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், சந்தேகநபர்களிடம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

20 வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டில் வியாபாரம் செய்து வரும் ஒருவரினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

20 கோடி மோசடி செய்த தம்பதி

அதன்படி சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் பிரகாரம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நீர்கொழும்பு குரன பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான தம்பதியினால் நடத்தப்பட்ட இந்த நிறுவனத்தில் எவரேனும் பணத்தை முதலீடு செய்திருந்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட தம்பதியினர் இருவரும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.