19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் நாட்டிற்கு மதிப்பிட முடியாதளவு பாதிப்பு
நாட்டிற்கு 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் மதிப்பிட
முடியாத அளவு பாதிப்பு ஏற்பட்டதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதனை நீக்கி, 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவர
மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தை அரசாங்கத்திற்கு வழங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அனைத்துப் பிரதேச செயலாளர் பிரிவிலும் ஒரு தேசிய பாடசாலையை
ஆரம்பிக்க அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாகவும், ஜனாதிபதி
கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து இதற்கான ஆலோசனை பெறப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.