16 பொலிஸார் சுய தனிமைப்படுத்தல்
இனிதும பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 16
பொலிஸார் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக
நபர்கள் பூசா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள
நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து, அவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்த
பொலிஸார் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.