16 இந்திய மீனவர்கள் கைது
இலங்கைக் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் நாட்டுக்கு
அத்துமீறி நுழைந்து கடற்றொழில் ஈடுபட்ட 16 இந்திய மீனவர்கள் நேற்று(23) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்காக
சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்