11 தமிழ் இளம் பெண்களுக்கு எயிட்ஸ – எங்கே செல்கிறது தமிழினம் ..?
இலங்கை வவுனியாவில் 11 இளம் தமிழ் பெண்கள் எயிட்ஸ் நோயினால் பாதிக்க பட்டுள்ளதாக தெரியவருகிறது
ஐரோப்பாவின் ,ஆடை தொழில் சாலை ஒன்றில் பணிபுரியும் இளம் பெண்களே இந்த நோயில் அதிகம் பாதிக்க பட்டுள்ளனர்
வறுமையின் காரணமாக தமது குடும்பங்களை காப்பாற்றிட இங்கே வேலைக்கு வரும் பெண்களை தமது வலைக்குள் வளைத்து
போடும் கும்பல் ஒன்று அவர்களுக்கும் ஆசை காட்டி விபச்சாரத்தில் ஈடுப்படுத்தி வருகின்றனர்
அவ்விதம் ஈடுபட்ட பெண்களில் அதிகமானவருக்கே இந்த உயிர் கொல்லி நோயானது உள்ளது கணடறிய பட்டுள்ளது
எனினும் வவுனியா மருத்துவமனை இதனை தெரிவிக்காது மறைத்து வருவதான குற்ற சட்டு முன் வைக்க பட்டுள்ளது
இவ்விதம் விடயத்தை வெளியில் தற்போது வெளியிட்டால் ,இந்த பெண்களை தமது வலைக்குள் சிக்க வைக்க முடியாது என்ற நிலை
ஏற்பட்டு விடும் என்பதால் அரசியல் பின்பலத்துடன் மறைக்க படுவதாக
சமூக நலன் அக்கறை கொண்ட சிலர் நமக்கு தெரிவித்தனர்
இதே போல சில ஆண்டுகளுக்கு முன்னர் இளம் பெண் ஒருவர் எயிட்ஸ் நோயால் பாதிக்க பட்டதும் ,தான் எவ்வாறு ஏமாற்ற பட்டு
இன்று சாவின் விழிப்பில் உள்ளேன் என்ற கண்ணீர் விடயத்தினை தெரிவித்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
அப்பாவிகளின் வறுமையை பாவித்து ,இவ்விதம் ஒரு குடும்பத்தை கண்ணீரில் ஆழ்த்தி செல்லும் இந்த கொடிய கொரனோ
வியாபாரிகள் ,இவ்வாறானவர்களை இனியெனும் அழிவில் இருந்து காப்பாற்றுவார்களா ..?