வைத்தியர் முகைதீன் சுட்டுப்படுகொலை: புளொட் அமைப்பைச் சேர்ந்தவருக்கு மரணதண்டனை வழங்கிய நீதிபதி இளஞ்செழியன்

இளஞ்செழியனின் மற்றுமொரு அதிரடி தீர்ப்பு
Spread the love

வைத்தியர் முகைதீன் சுட்டுப்படுகொலை: புளொட் அமைப்பைச் சேர்ந்தவருக்கு மரணதண்டனை வழங்கிய நீதிபதி இளஞ்செழியன்

வவுனியாவில் வைத்தியர் முகைதீன் என்பவரை சுட்டுப்படுகொலை செய்த சம்பவத்துடன் தொர்புடைய புளொட் அமைப்பைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞசெழியன் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

வவுனியாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் ஆம் மாதம் 20 ஆம் திகதி கற்குழியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் கடமையில் இருந்த முகைதீன் என்ற வைத்தியர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
 
இது தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட எதிரிக்கு எதிராக வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் சட்டமா அதிபரினால் வவுனியா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

வைத்தியர் முகைதீன் சுட்டுப்படுகொலை: புளொட் அமைப்பைச் சேர்ந்தவருக்கு மரணதண்டனை வழங்கிய நீதிபதி இளஞ்செழியன்

மேல்நீதிமன்றில் இது தொடர்பான வழக்கு விசாரணைகள் முடிவடைந்த நிலையில் இன்றையதினம் (08.06) தீர்ப்புக்காக தவணையிடப்பட்டிருந்தது.

இதன்போது, உயிரிழந்தவரின் உடலில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட துப்பாக்கித் தோட்டாக்கள் எதிரியினால் பயன்படுத்தப்பட்டிருப்பதாக மன்று திருப்தியடைந்தது. அந்தவகையில் எதிரி குற்றவாளியாக இனங்காணப்படுவதாக மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதற்கமைய அவருக்கு மரணதண்டை வழங்கப்பட்டிருந்தது.

வவுனியாவை சேர்ந்த புளொட் அமைப்பின் உறுப்பினரான நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிறேமநாத் என்ற நபருக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் குறித்த நபர் தமிழ் மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) வவுனியா வேப்பங்குளம் முகாமுக்கு பொறுப்பாக செயற்ப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் 14 வருடங்களாக வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்திருந்தது. தீர்ப்பின் பின்னர் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No posts found.