வெள்ளவத்தை முடக்கம் – மக்கள் அவதி
கொழும்பு-காலி பிரதான வீதியில் வெள்ளவத்தை பகுதியானது, நாளை (14) காலை முதல் மறு அறிவித்தல் வரையிலும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகையால், வாகன சாரதிகள், மெரின் ட்ரைவ் வீதியை மாற்று வழியாக பயன்படுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
வௌ்ளவத்தையில் கழிவுநீர் குழாய்கள் பழுதுபார்க்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.