வெலிகடை சிறைச்சாலைக்குள் வீசுவதற்காக வைக்கப்பட்டிருந்த பொதியில் ரூ. 5 இலட்சம் பெறுமதியான பொருட்கள்!

Spread the love

வெலிகடை சிறைச்சாலைக்குள் வீசுவதற்காக வைக்கப்பட்டிருந்த பொதியில் ரூ. 5 இலட்சம் பெறுமதியான பொருட்கள்!

வெலிகடை சிறைச்சாலைக்குள் சட்டவிரோத பொருட்கள் அடங்கிய பொதியொன்று வீசப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான

சந்தேகநபர் பொரளை பொலிஸாரால் நேற்று (28) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேகநபரிடம் இருந்து அவ்வாறு வீசுவதற்கு பொதியிடப்பட்டிருந்த பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பொதியில் 04 கைப்பேசிகள், புகையிலை தொகையொன்று, 10 கிராம் ஹெரோயின் மற்றும் பொறித்த கருவாடு

பொதியொன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவற்றின் பெறுமதி சுமார் 5 இலட்சம் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.

சீவலீ படுமகம பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் இது ​போன்ற செயற்பாடுகளுக்காக 12 பேர் கொண்ட குழுவொன்றை ஈடுபடுத்தியுள்ள நிலையில், இதற்கு

முன்னர் சிறைச்சாலை வளாகத்தினுள் 12 தடவைகள் இவ்வாறான பொதிகள் வீசப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது

      Leave a Reply