போலியான ஆவணங்களை பயன்படுத்தி, இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றார் என்றக்
குற்றசாட்டின் கீழ், 2 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்
விமல் வீரவன்சவின் மனைவி சஷீ வீரவன்சவின் பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
பிணை மனுமீதான விசாரணை, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால், நாளை (31) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.