வீதி விபத்துக்களை தடுப்பது தொடர்பிலான கலந்துரையாடல் – கிளிநொச்சி

Spread the love

வீதி விபத்துக்களை தடுப்பது தொடர்பிலான கலந்துரையாடல் – கிளிநொச்சி

தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற வீதி விபத்துக்கள் மற்றும் அவற்றினால் ஏற்படுகின்ற உயிரிழப்புக்களை தடுப்பது தொடர்பில்; கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்றைய தனம் இந் நிகழ்வு நடைபெற்றது.

வீதி விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் காயமுறுவதன் மூலமாக உடல் வலுவினை இழக்கின்ற நிலைமைகளை குறைப்பதற்கான செயற்திட்டத்தினை மேற்கொள்வதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.
அந்தவகையில் வீதி விபத்துக்கள் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்கள் தொடர்பிலான பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டதோடு முன்மொழிவுகளும் பெறப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக மாவட்ட மட்டத்தில் விபத்துக்களினை தவிர்ப்பது தொடர்பிலான குழுவொன்றினை உருவாக்கி விபத்துக்கள் இடம்பெறுவதற்கான காரணங்களை ஆராய்வதற்கும் விபத்துக்கள் ஏற்படுகின்ற நிலைமையில் அவ் விபத்தானது நிகழ்ந்த காரணம் தொடர்பில் ஆராய்ந்து அறிந்து அவற்றை தவிர்ப்பதன் ஊடாக எதிர்காலத்தில் விபத்துக்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களை வெகுவாக குறைத்துக்கொள்ளும் வகையில் ஆரம்பகட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக சமூகமட்டத்திலான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply