அறுவடை குறைந்த விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு

Spread the love

அறுவடை குறைந்த விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு

உரப் பிரச்சினை காரணமாக குறைந்த அளவிலான அறுவடையைப் பெற்ற விவசாயிகளுக்கு

நட்டஈடு வழங்குவதில் தாமதம் ஏற்படாது என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் (22) நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்

சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இழப்புக்கள் மதிப்பீடு செய்யப்பட்டதன் பின்னர் விவசாயிகளுக்கு ஏற்பட்ட நட்டத்திற்கமைய அவர்களுகான நட்டஈட்டுத் தொகையை கட்டாயமாக வழங்க

அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்

    Leave a Reply