விவசாயத்திற்கு முன்னுரிமை அளிப்போம் ஜனாதிபதி ரணில்

ரணிலுக்கு எதிராக யாழில் தமிழ் மக்கள் போராட்டம்
Spread the love

விவசாயத்திற்கு முன்னுரிமை அளிப்போம் ஜனாதிபதி ரணில்

மஹா கனதராவ குளத்தை நீராதாரமாக கொண்ட அனுராதபுரம் நீர் வேலைத் திட்டத்தை ​நேற்று (15) மக்கள் பாவனைக்காக கையளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதனை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராய்தார்.

இதன்போது விவசாயிகள் ஜனாதிபதியிடம் தங்களது பிரச்சினைகளை நேரடியாக கூறியதோடு, அதற்கு ஜனாதிபதி சாதகமாக பதிலளித்தார்.

வேலைத் திட்டத்திற்கான எதிர்ப்பு குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி, நீர்த்திட்டத்தின் நிர்மாணப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதால், எதிர்ப்புக்களை கைவிடுமாறும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து சிந்துக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

அது தொடர்பிலான மக்களின் யோசனைகளை இரண்டு வாரங்களுக்குள் பெற்றுத்தருமாறும், அவற்றில் சாதகமான விடயங்களை விரைவில் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மஹா கனதார குளத்தை அண்மித்து வசிக்கு விவசாயிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என நம்புவதாக மஹாகனதார ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கத் தலைவர் சுபசிங்க ரத்நாயக்க தெரிவித்தார்.

மஹாகனகதராவ குளத்திற்கு நீரைக் கொண்டு வரும் கால்வாய்களைப் புனரமைப்பதற்குத் தேவையான நிதியை வழங்கினால் பெருமளவிலான நீரை சேமிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

விவசாயத்திற்கு முன்னுரிமை அளிப்போம் ஜனாதிபதி ரணில்

அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, மஹாகனதராவ குளத்தின் புனரமைப்பு பணிகளுக்கு இவ்வருடத்தில் வழங்கப்பட்டிருக்கும் ஒரு பில்லியன் ரூபாவை உடனடியாக பயன்படுத்துமாறும் வலியுறுத்தினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

”இந்த வேலைத் திட்டத்தை எவ்வாறு முன்னெடுக்கலாம் என்பது தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இந்த திட்டத்தை இடைநடுவில் கைவிட முடியாது. நாம் எல்லா சந்தர்ப்பங்களிலும் விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இதுவரையில் எல்லா அரசாங்கத்திலும் நீர் வழங்கல் சபை ஒரு அமைச்சின் கீழும் நீர்ப்பாசன திணைக்களம் ஒரு அமைச்சின் கீழும் காணப்பட்டது. இம்முறை அவை இரண்டையும் ஒன்றிணைத்து ஒரு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அதனால் இந்த வேலைத் திட்டத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் குறித்த தீர்மானங்களை எடுக்க வேண்டும்.” என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.

விவசாயி ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

”இந்த மஹாகனதராவ குளத்தின் கீழ் பிரிவில் உள்ள கால்வாய்கள் 1960களில் அமைக்கப்பட்டவையாகும். 50 – 60 வருடங்கள் பழமையானவை. ஜனாதிபதி அவர்களே அணை உடைந்து விழும் நிலையில் காணப்படுகின்றது.

குளத்தைப் புனரமைக்க 1000 மில்லியன் ரூபா வழங்கப்பட்டிருக்கிறது. அதன் கீழ் பிரிவிலிருக்கும் குளக் கட்டுகள் 25 கிலோ மீற்றர் நீளமுடையது. தெற்கில் இருக்கும் குளக்கட்டு 17 கிலோமீற்றர் நீளமுடையது. இரு பகுதிகளிலும் 50 இணை வாவிகள் உள்ளன.

மேலும் 500க்கும் மேற்பட்ட நீர் கசிவுகள் காணப்படுகின்றன. இவ்வாறு விரயமாகும் நீரை சேகரிக்க முடியும். தற்போது எமக்கிருக்கும் 38,000 ஏக்கருக்கான நீரில் 15000 ஏக்கருக்கும் அதிகமான நீர் வீண் விரயமாகிறது.

ஜனாதிபதி அவர்களே, நாம் கூறிய விடயங்களுக்கு சாதகமான பதில்களைப் பெற்றுத் தருவீர்கள் என நம்புகிறோம்.” என்று அந்த விவசாயி தெரிவித்தார்.