விமர்சனங்களை தூக்கி சாப்பிட்ட நயன்தாரா

Spread the love

விமர்சனங்களை தூக்கி சாப்பிட்ட நயன்தாரா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, தன்னைப்பற்றி வரும் விமர்சனங்களை கண்டுக்கொள்ளாமல் அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார்.

விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாத நயன்தாரா
யன்தாரா


நடிகை நயன்தாரா தனது அடுத்த படத்தின் வேலையில் தீவிரம் காட்டியுள்ளார். இதற்கிடையில் கூழாங்கல் படம் குறித்து

இணையத்தில் வரும் கருத்துகள் நயன்தாராவை தர்மசங்கடத்திற்கு ஆளாக்கியுள்ளது. கூழாங்கல் படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவன் தயாரிக்கவே இல்லை.

கடைசி நேரத்தில் ஆஸ்கர் தேர்வுக்குழுவிற்கு அனுப்ப போதிய பணம் இல்லாததால் அதற்கு வேண்டிய தொகையை விக்னேஷ் சிவன், நயன்தாரா கொடுத்ததாகவும் இதனால்தான் தயாரிப்பு

என்று அவர்கள் கம்பெனியை போட வேண்டியதாகிவிட்டது என்று இணையத்தில் செய்திகள் பரவி வருகின்றன.

நயன்தாரா

ஆனாலும் அந்த இக்கட்டான சூழலில் பணம் கொடுத்து உதவாவிட்டால் ஆஸ்கர் தேர்வுக்குழு கண்களுக்கே கூழாங்கல் படம் தெரியாமல் போயிருக்கும் என்பது உண்மை. ஆனால் இந்த

விமர்சனங்களைப் பற்றிக் கவலைப்படாமல் அடுத்த படத்திற்காகத் தனது ஹேர் ஸ்டைலை மாற்றிக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டிருக்கிறார் நயன்தாரா.

    Leave a Reply