விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கவிழ்ந்த பயணிகள் பேரூந்து
Spread the love

விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

இன்று (04) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

தம்புத்தேகம, ஏரியகம பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 8 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குருநாகலில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியோரத்தில் நிற்கும் போது, ​​அதே திசையில் பயணித்த வேன் லொறியின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.