விபத்தில் இருவர் பலி
பாணந்துறை மற்றும் வரகாபொல பகுதிகளில் நேற்று(11) இடம்பெற்ற விபத்துகளில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை, கோரக்கான பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள் என்பன மோதி விபத்துக்குள்ளானதில் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.
வாதுவ பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தில் இருவர் பலி
இதேவேளை, வரகாபொல அங்குருவெல்ல வீதியின் மைனொலுவ பிரதேசத்தில், முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகிச் சென்று பாதசாரி மீது மோதியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த 62 வயதுடைய நபர் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.