விசேட விமானத்தில் -இலங்கை வந்திறங்கிய துருக்கிய கடற்படையினர்
காலி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலில் சேவையாற்றுவதற்காக
துருக்கியில் இருந்து 24 கடற்படையினர் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
துருக்கியின் செடான் நகரில் இருந்து விஷேட விமானம் ஒன்றின் மூலம் அவர்கள் வருகை தந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பீ.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.