ஜனவரி மாதம் 06 ஆம் திகதி முதல் தன்னை சந்தித்த சகலரும், தங்களை சுய தனிமைக்கு உட்படுத்துமாறு, கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ள அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கோரியுள்ளார்.
அமைச்சரின் ஊடகச் செயலாளர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல் அறிகுறி காரணமாக கடந்த 09 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டதையடுத்து, அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.