வாள்களுடன் மோதலில் ஈடுபட்ட போதைப்பொருள் வியாபாரிகள் அதிரடி கைது
பேலியகொடையில் இரு குழுக்களுக்கிடையில் நீண்ட காலமாக நிலவி வந்த தகராறில் ஏற்பட்ட மோதலின் போது போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது, நான்கு வாள்களை வைத்திருந்த 23-35 வயதுடைய எட்டு ஆண்களும், 26, 46 மற்றும் 47 வயதுடைய மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாள்களுடன் மோதலில் ஈடுபட்ட போதைப்பொருள் வியாபாரிகள் அதிரடி கைது
தகவல்களின்படி, கைது செய்யப்பட்டவர்களில் 7 பேர் பல குற்றங்களுக்காக பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர்கள்.
இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளில், வெளிநாட்டில் மறைந்திருந்து வியாபாரி ஒருவரால் நடத்தப்படும் போதைப்பொருள் கடத்தலுடன் இவர்கள் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
- பெண் கழுத்து நெரித்து கொலை
- வவுனியா மருக்காரம்பளை பாடசாலை அதிபருக்கு பாராட்டுவிழா
- இஸ்ரேலுக்குள் வெடித்தரொக்கட் மக்கள் காயம்
- மின்னல் தாக்கத்தினால் அவசரசிகிச்சைப் பிரிவுநாசம்
- காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் பணி
- கதிர்காம பாதயாத்திரை
- கண்டியில் ஆசிரியர் ஒருவர் கைது
- புத்தரின் போதனைகள் பற்றிய ஆராய்ச்சி
- நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
- போரில் காயமடைந்த இராணுவத்தினருக்கு சம்பளம்