வாக்களிப்பு நிலையங்களில் புகைத்தல், மதுபானம் போன்றவற்றுக்கு தடை
வாக்களிப்பு மத்திய நிலையங்களில் இரவு வேளையில் தங்கியிருக்கும்
தேர்தல் அதிகாரிகள் புகைத்தல், மதுபானம் பாவித்தல் வேறு எந்தவித
போதைப் பொருட்கள் மற்றும் லைற்றர் முதலானவற்றை எடுத்துச்செல்லுதல்
முழுமையாக தடை செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை தேர்தல் மத்திய நிலையங்களில் சுகாதார பாதுகாப்பு உறுதி
செய்யப்பட்டிருப்பதனால் தேர்தல் கடமைகளை மேற்கொள்ளும் அதிகாரிகள்
மற்றும் வாக்காளர்கள் இது தொடர்பில் எந்தவித அச்சத்தையும்
ஏற்படுத்திக்கொள்ள தேவையில்லை என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.