வவுனியா வைத்தியசாலையில் பாலியல் லஞ்சம் PHOTO
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கு பாலியல் லஞ்சம்
தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு ஒன்று இன்று இடம்பெற்றது.
வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.நந்தகுமார் தலைமையில் டிரான்ஸ் பேரன்சி இன்டநெசனல் சிறிலங்கா நிறுவனத்தின் வவுனியா கிளையின் ஏற்பாட்டில்
நடைபெற்ற குறித்த செயலமர்வில் நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் சுஜீத் மற்றும் மங்களா சங்கர் அவர்களும் வளவாளராக கலந்து கொண்டு பாலியல் லஞ்சம்
தொடர்பான விழிப்புணர்வு மற்றும் அதற்கான சட்ட ஏற்புகள் தொடர்பான விளக்கமும் வழங்கப்பட்டது.
இதன்போது பாலியல் லஞ்சம் மற்றும் லஞ்ச ஊழலை கட்டுப்படுத்தல் மற்றும் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை
எடுத்தல் என்பன தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. இதில் 50க்கு மேற்பட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு பயனடைந்திருந்தனர்.