வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயத்தின் மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி photo
மாவட்ட அரச அதிபரின் பங்கேற்புடன் சிறப்பாக இடம்பெற்ற வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயத்தின் மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி
வவுனியா மாவட்ட அரச அதிபரின் பங்கேற்புடன் அல் இக்பால் மகாவித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் சிறப்பாக இடம்பெற்றது.
பாடசாலையின் மைதானத்தில் நேற்று மாலை அதிபர் ஏ.கே.உபைத் அவர்களின் தலைமையில் குறித்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி நடைபெற்றது.
முன்னதாக அதிதிகள் மைதான பிரதான வாயிலில் இருந்து பாடசாலை மாணவர்களின் பான்ட் வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து தேசிய கொடி,
பாடசாலை கொடி, இல்லக் கொடி என்பன ஏற்றி வைக்கப்பட்டதுடன், அரச அதிபர் அவர்களால் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
விளையாட்டு வீரர்கள் தமது திறமைகளை பயன்படுத்தி விறுவிறுப்பாக போட்டி நிகழ்வுகளில் பங்கு பற்றியதுடன் உடற் கல்வி கண்காட்சியும் இடம்பெற்றது. தொடர்ந்து
விளையாட்டு நிகழ்வுகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்களும், குழு நிகழ்வு மற்றும்
தனிநபர் சாதனை மாணவர்களுக்கான வெற்றிக் கிண்ணங்களும் வழங்கப்பட்டன.
இல்ல திறனாய்வுப் போட்டியில் ஹிலால் இல்லம் மூன்றாம் இடத்தையும், சிராஜ் இல்லம் இரண்டாம் இடத்தையும்
பெற்றுக் கொண்டதுடன் பாடசாலையின் 5 வருட வரலாற்றை மாற்றி நீண்ட இடைவெளிக்கு பின் தாரிக்
இல்லாம் முதல் நிலை வெற்றி பெற்று கிண்ணத்தை தனதாக்கியது.
குறித்த நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் எஸ்.எம்.சமன்பந்துலசேன, உளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.எல்.பி.சந்திரசேகர, வவுனியா தெற்கு
வலயப் பிரதிநிதி ஏ.எம்.சுபைர், அயல் பாடசாலை அதிபர்கள், பாடசாலை பிரதி அதிபர், பாடசாலை பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர்,
வளர்பிறை இளைஞர் கழகத்தினர், பெற்றோர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, வவுனியா மாவட்ட அரச அதிபர் புதிதாக பதவியேற்ற பின்னர் முதன் முதலாக பங்கு பநற்றிய வெளி சமூக நிகழ்வு இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.