வவுனியாவில் வீடு புகுந்து திருட முற்பட்டவர் நையப்புடைப்பு

வவுனியாவில் வீடு புகுந்து திருட முற்பட்டவர் நையப்புடைப்பு
Spread the love

வவுனியாவில் வீடு புகுந்து திருட முற்பட்டவர் நையப்புடைப்பு

வவுனியா பத்தினியார் மகிளங்குளம் கிராமத்தில் வீடு புகுந்து திருட முற்பட்ட நபரை பொதுமக்கள் நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

நேற்று (25) மாலை 5.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளா் தொிவித்தாா்.

குறித்த பகுதியிலுள்ள வீடோன்றினுள் இனந்தெரியாத நபரொருவர் புகுந்து வீட்டிலுள்ள பொருட்களை திருட முயற்சித்துள்ள சமயத்தில் வீட்டிலிருந்தவர்கள் கூச்சலிட்டதை அடுத்து, அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

வவுனியாவில் வீடு புகுந்து திருட முற்பட்டவர் நையப்புடைப்பு

எனினும் குறித்த நபரை மடக்கிப்பிடித்த அயலவர்கள் நையப்புடைத்துள்ளனா்.

இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றதுடன், மேலதிக விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட நபர் பல்வேறு திருட்டுச்சம்பவங்கள் தொடர்பில் பல தடவைகள் வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No posts found.