வவுனியாவில் தேங்காய் ஏற்றி சென்ற பட்டா ரக வாகனம் பாலத்திற்குள் பாய்ந்து விபத்து PHOTO
வவுனியா நொச்சிமோட்டை பாலத்தடியில் இன்று (21.02.2020) அதிகாலை 4.00 மணியளவில் இலகுரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளாகியிருந்தது.
இவ் விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
யாழிலிருந்து ஏ9 வீதியூடாக வவுனியா நோக்கி தேங்காய்களை ஏற்றிக்கொண்டு பயணித்துக் கொண்டிருந்த இலகுரக வாகனம் நொச்சிமோட்டை
பாலத்திற்கு அருகில் சென்றபோது வேக்கட்டுப்பாட்டை இழந்து பாலத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் வாகனம் சிறு சேதங்களுக்குள்ளாகியுள்ளதுடன் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.