வவுனியாவில் தென்னை பயிர்ச்செய்கையாளர் அபிவிருத்தி சங்கம் திறந்து வைப்பு photo
தென்னை பயிர்ச்செய்கையாளர் அபிவிருத்தி சங்க அலுவலகம் வவுனியா சமயபுரம் கிராமத்தில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.
சங்கத்தின் தலைவர் இ.யோ.கேமன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தென்னைபயிர்செய்கை சபையின் வலய இணைப்பாளர்
ஜெயந்த பமுனுஆராட்சி முதன்மை அதிதியாக கலந்துகொண்டு கட்டடத்தை திறந்து வைத்தார்.
கிராம மட்டங்களில் தென்னை பயிர்ச்செய்கையை ஊக்குவிப்பதற்காகவும் தென்னையின் மூலம்
மேற்கொள்ளப்படும் உற்பத்திகளை அதிகரித்து அதனால் வரக்கூடிய உப வருமானங்களை பெருக்குவதுடன், தொழில்
வாய்ப்பினை ஏற்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு குறித்த சங்கம் இயங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் தென்னை பயிர்ச்செய்கை சபையின் பிராந்திய முகாமையாளர் உதயச்சந்திரன், தென்னை
அபிவிருத்தி சங்கங்களின் இணைப்பாளர் மா.ரோய் ஜெயக்குமார், பயிர்ச்செய்கையாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.