வவுனியாவில் கிணற்றில் இருந்து நபர் சடலமாக மீட்பு

Spread the love

வவுனியாவில் கிணற்றில் இருந்து நபர் சடலமாக மீட்பு

வவுனியா கற்குழி பகுதியில் சுய தனிமைப்படுத்தலுக்குட்பட்ட நபர் இன்று (16) காலை பொது கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த நபர் உட்பட அவரின் உறவினர்கள் சுகாதார பிரிவினரினால் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தபட்டனர்.

இந்நிலையில் நேற்று (15) இரவு வீட்டிலிருந்து கணேசன் இளங்குமரன் (வயது-51) என்ற நபர் வெளியே சென்றுள்ள நிலையில் அவரை உறவினர்கள் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று (16) காலை கற்குழி பகுதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை வீதியிலுள்ள பொது கிணற்றில் சடலமாக மிதந்துள்ளார்

    Leave a Reply