வரட்சியான காலநிலை காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

கொழும்பின் பல பகுதிகளுக்கு 10 மணித்தியால நீர் வெட்டு
Spread the love

வரட்சியான காலநிலை காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மக்களைக் கோரியுள்ளது.

வரட்சியான காலநிலை 2 மாதங்களுக்கு மேல் நீடித்தால், பகுதியளவில் நீர் வழங்கப்பட வேண்டும் என சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அபிவிருத்தி திருமதி அனோஜா களுவாராச்சி தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தற்போதைய நீர்மட்டம் போதுமானதாக இருப்பதாகவும், முடிந்தவரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே தண்ணீரை பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.