லொறிக்குள் பதுங்கி வந்த 10 அகதிகள் லண்டனில் கைது
பேலியம் நாட்டில் இருந்து பிருட்டனுக்குள் நுழைந்த லொறி ஒன்றுக்குள் பதுங்கி வந்த சட்ட விரோத குடியேற்ற வாசிகள் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்கள் 4 பெரியவர்கள் ஏனையவர்கள் 18 வயதுக்கும் குறைவானவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது
தற்போது லொறி சாரதி கைது செய்ய பட்டுள்ளார் .
இவர்கள் அனைவரும் லாரியின் சக்கரத்தின் அச்சில் பதுங்கியவாறு பயணித்துள்ளனர்
லொறி வேகமாக பயணிக்கும் பொழுது மிக ஆபத்தான ஒன்று பயணம் ,மிகவும் குளிர் நிலவும் இவ்வேளையில்
இவர்கள் உயிரை பணயம் வைத்து இவ்வாறு லண்டனுக்குள் புகுந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
மேலும் இது தொடர்பான ஆட்கடத்தல் குற்ற சாட்டில் சோதனை நடத்திய பொழுது இருவர் ஆயுதங்களுடன் கைது செய்ய பட்டுள்ளனர்