லண்டனில் மனைவி பிள்ளையை வெட்டி கொன்ற தமிழர்
இன்று லண்டன் பிரெண்டபோர்ட .பகுதியில் தமிழர் ஒருவர் தனது 36 வயது மனைவி
மற்றும் மூன்று வயது மகனை கத்தியால் கோரமாக குத்தி படுகொலை
செய்து ,தன்னை தானும் குத்தி தற்கொலை செய்துள்ளார்,
தற்கொலை செய்து கொண்ட கணவர் 42 வயதுடையவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்
இந்த கொலைக்கான உடனடி கரணம் தெரியவரவில்லை ,இரத்த வெள்ளத்தில்
கிடந்த சடலங்கள் மீட்க பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
இது குறித்த விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
மனநோயின் தாக்குதல் அதிகரிப்பு காரணமாக இவ்வாறான படுகொலை
சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது,இந்த வருடத்தில்
இடம்பெற்ற நூறாவது கொலையாக இவர்களது படுகொலை சம்பவம் பதிய பெற்றுள்ளது என காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்
அயலவர்களோ பழகுவதற்கு மிகவும் இனிமையானவர் ,அழகான குழந்தை ,
சிரித்த முகத்துடன் செல்வார்கள் ,அவர்களுக்கு நடந்துள்ள இந்த செயல்
தம்மை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளதாக அவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்