லண்டனில் கோட்டாவே வீட்டுக்கு போ – மக்கள் போராட்டம் – படங்கள் உள்ளே

Spread the love

லண்டனில் கோட்டாவே வீட்டுக்கு போ – மக்கள் போராட்டம் – படங்கள் உள்ளே

இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோட்டாபாயாவுக்கு எதிராக


இன்று -06-04-2022 மதியம் 12 மணியளவில் லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக கண்டன பேரணி இடம்பெற்றது

இலங்கையில் மக்கள் படும் அவலம் ,மற்றும் பொருளாதார நெருக்கடி ,பட்டினி ,மற்றும் மக்களுக்கு எதிரான வன் முறைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கோஷமிட பட்டன

இங்கு கலந்து கொண்ட மக்களை சிங்கள உளவுத்துறையினர் மறைந்திருந்து காணொளி மற்றும் படங்கள் பிடித்துள்ளனர்

எனினும் அதனை மீறி மக்கள் தமது எதிர்ப்பை காண்பித்தனர் ,இலங்கையில் தொடர்ந்து ஆளும் ஆட்சியாளர்க்ளுக்கு எதிராக சிங்கள தமிழ் மக்கள் இணைந்து

போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளதும் ,இவர்கள புரிந்த தமிழ் இன படுகொலைக்கு தீர்வு வழங்க படவேண்டும் எனவும் மக்கள் கோரி வருகின்றனர்

தமிழர்களை அழித்த அதே மே மாதம், மற்றும் அந்த மக்கள் அகதிகளாக இடம்பெயர்நது உயிர் நீத்த இதே சித்திரையில் அதே ஆட்சியாளர்களுக்கு எதிராக

சிங்கள மக்கள்
உள்ளிட்டவர்கள் எதிராக பொங்கி எழுந்துள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

    Leave a Reply