யுக்திய சுற்றிவளைப்பு;நீதிமன்றம் அதிரடி உத்தரவு

குற்றச் செயலில் ஈடுபட்ட 5 பொலிஸார் இடைநிறுத்தம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு - திருகோணமலை மாவட்டங்களில் பொலிஸார் ஒழுக்கம் தவறி மேற்கொண்ட குற்றச் செயல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிஸார் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இன்று (23) பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார். மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு பொலிஸாருக்கிடையே கடந்த 6 ஆம் திகதி மாலை ஏற்பட்ட கைகலப்பில் கல்லால் தாக்கிய சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்ததையடுத்து தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்த பின் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 11 ஆம் திகதி ஏறாவூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மட்டக்களப்பு நகரில் வேலைபார்த்து வரும் கடையில் வேலை முடித்து கொண்டு இரவு 11 மணிக்கு நடந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த இளைஞனை முச்சக்கரவண்டியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 பொலிஸார் இளைஞனை நிறுத்தி அச்சுறுத்தி அவரிடம் இருந்து 6,500 ரூபாவை பறித்தெடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 3 பொலிஸாரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 3 பேரையும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டனர். அதேவேளை கடந்த 20 ஆம் திகதி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையற்றி வந்த அதேபிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 150,000 ரூபா பெறுமதியான மாடு ஒன்றை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில் அவரும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். இவ்வாறு குற்றச் செயல் காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் 5 பொலிஸார் கைது செய்யப்பட்டு பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.
Spread the love

யுக்திய சுற்றிவளைப்பு;நீதிமன்றம் அதிரடி உத்தரவு

யுக்திய’ விசேட நடவடிக்கையின் போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட பல வாகனங்களை பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுவல நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதுடன், ஏறக்குறைய 100 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனங்களை அதன் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அறிவுறுத்தியுள்ளது.

விசாரணைக்காக வாகனங்களை மேலும் தடுத்து வைக்க பொலிஸார் விடுத்த கோரிக்கையையும் நீதவான் நிராகரித்துள்ளார்.

வழக்கு விசாரணையின் போது, ​​மேற்படி சொத்துக்களை கையகப்படுத்துவதற்கு உயர் நீதிமன்றத்தில் முறையான உத்தரவுகள் பெறப்படவில்லை என பாதுகாப்பு சபை குற்றம் சாட்டியது.

யுக்திய சுற்றிவளைப்பு;நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இலங்கையில் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் பொலிஸாரால் ‘யுக்திய’ விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையின் போது போதைப்பொருள் கடத்தல்காரர் என்று கூறப்படும் மலலகே சுதத் கித்சிறி என்றழைக்கப்படும் “வெலிவிட்ட சுத்தா”வின் சகோதரிக்கு சொந்தமான பல வாகனங்களை கடுவெல பொலிஸார் கைப்பற்றி குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரியவருகிறது .

குறித்த பெண்ணிடம் இருந்து ஐந்து சொகுசு பஸ்கள், சொகுசு வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை கடுவெல பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.