யாழ் வந்த விமானம் சென்னைக்கே திரும்பியது
யாழ்ப்பாணம் வந்த விமானம், மோசமான காலநிலையால் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்குத் திரும்பியது.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நோக்கி திங்கட்கிழமை ( 13) புறப்பட்டது .
இந்த பயணிகள் விமானம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் நிலவிய மோசமான காலநிலையால் தரையிறங்க முடியாமல் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் மீண்டும் தரையிறக்கப்பட்டது.
இந்த விமானம் இன்று (14) காலை மீண்டும் யாழ்ப்பாணம் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் மொத்தமாக 24 பயணிகள் பயணித்த நிலையில் அவர்களுக்கான மாற்றுப் பயணச்சீட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் அனைவரும் சென்னையில் உள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.
- பிரான்ஸ் வீதியில் உணவின்றி தவிக்கும் தமிழ் முதியவர்
- முள்ளிவாய்க்கால் நினைவுதினம் பிரிட்டன் பாராளுமன்றில்
- தனி ஈழம் வெற்றி பெறும்
- கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு
- வாக்கு சேகரிக்க சிலருக்கு பணம்
- LTTE மீதான தடை நீட்டிப்பு
- கண்டு பிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம்
- சிசுவை பிரசவித்த மாணவி சிக்கினார்
- பாராளுமன்றில் செல்வராசா கஜேந்திரன் ஆற்றியஉரை
- லண்டன் Harrowவில் குமுதினி படுகொலை நினைவேந்தல்